ரணில் மறந்தவற்றை நினைவுபடுத்தும் சுமந்திரன்
2017ஆம் ஆண்டில் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழிப்பதாக அப்போதைய பிரதமரும் சமகால ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்கக் கோரி சர்வ ஜன நீதி அமைப்பு என்ற பெயரில் நாடளாவிய ரீதியில் மனு தாக்கல் செய்யும் போராட்டத்தை தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத சட்டம்
ரணில் மறந்தவற்றை நினைவுபடுத்தும் சுமந்திரன் | Sri Lanka Political Issue Today
இந்த மனுதாக்கல் பிரச்சாரம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பு பொது நூலகத்தில் பல சிவில் மற்றும் பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
இந்த சட்டத்தை மீளப்பெறுமாறு கோரி இவ்வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட மனுநீதி இயக்கம் இவ்வாறே மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போராட்டக்காரர்களுக்கு அச்சுறுத்தல்
ரணில் மறந்தவற்றை நினைவுபடுத்தும் சுமந்திரன் | Sri Lanka Political Issue Today
1982 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடுகள் சட்டமாக கொண்டுவரப்பட்ட இந்த கொடூரமான சட்டத்தின் கீழ், அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சித்த 3 போராட்டக்காரர்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
இது அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடுபவர்களை அச்சுறுத்தும் ஒரு செயலாக உள்ளதென சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்