முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 872 இறந்த சிறுமி சவப்பெட்டியில் கண்விழித்த அதிசயம்!

இறந்த சிறுமி சவப்பெட்டியில் கண்விழித்த அதிசயம்! அடுத்த நொடியே காத்திருந்த பேரதிர்ச்சி
வயிற்று வலியால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி இறுதி சடங்கில் கண் விழித்த தகவல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த காமிலா ரோக்சானா மார்டினேஸ் (3) என்ற சிறுமி கடந்த சில தினங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் காய்ச்சல், வாந்தி ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சேர்த்துள்ளனர். இறந்த சிறுமி சவப்பெட்டியில் கண்விழித்த அதிசயம்! அடுத்த நொடியே காத்திருந்த பேரதிர்ச்சி | 3 Year Old Girl Wakes Up During Funeral Mexico சுயநினைவு இழந்து இறந்த சிறுமி அவரை பரிசோதித்த மருத்துசர்கள் சிறுமிக்கு மாத்திரைகள் வழங்கியுள்ளனர். ஆனாலும் சிறுமி உடல் நிலை மோசமடைந்ததோடு சிறிது நேரத்தில் சுயநினைவு இழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் உடனடியாக தீவிர சிகிச்சை அளித்தும் அடுத்த சில மணி நேரத்தில் சிறுமி உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோரிடம் மருத்துவமனை தெரிவித்துள்ளது. சிறுமி நள்ளிரவு நேரத்தில் உயிரிழந்த நிலையில், மறுநாள் இறுதிச்சடங்கு நடைபெற்றுள்ளது. இறுதிச் சடங்கில் கண் விழித்த அதிசயம் அப்போது சிறுமியின் உடலை சவப்பெட்டியில் வைத்து பெற்றோர் இறுதிச் சடங்கை செய்து உள்ளனர். அந்தநேரம் யாரும் எதிர்பாராதவகையில் இறந்ததாக கருதப்பட்ட சிறுமியின் கண்களில் திடீரென அசைவு தென்பட்டது. இதை அங்கிருந்தவர்கள் கவனித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர். மேலும் அப்போது, சிறுமி இன்னும் சாகவில்லை. மருத்துவரை கூப்பிடுங்கள் என்று அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறந்த சிறுமி சவப்பெட்டியில் கண்விழித்த அதிசயம்! அடுத்த நொடியே காத்திருந்த பேரதிர்ச்சி | 3 Year Old Girl Wakes Up During Funeral Mexico அதிர்ச்சி இதனால் பதற்றத்தின் உச்சிக்கு போன பெற்றோர் தங்களது பாச மகளை அவசரம் அவசரமாக மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு கொஞ்ச நேரத்திலேயே மருத்துவமனையில் சிறுமி மீண்டும் உயிரிழந்துள்ளது. இச்சம்பவம், சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?