கோட்டாவால் வந்த அவல நிலை : இலங்கைக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் நிதியுதவி-!
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிதியுதவி ஒன்றை வழங்கியுள்ளனர்.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அதன் மூலம் பெற்ற வெற்றிப் பணத்தில் 45,000 அவுஸ்திரேலிய டொலர்களை அவர்கள் நிதியுதவியாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் உள்ள குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக யுனிசெஃப் மூலம் குறித்த தொகையை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்