முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 869 மீண்டும் ஆயுதம் தூக்கினாலே எமக்கு தீர்வு:

மீண்டும் ஆயுதம் தூக்கினாலே எமக்கு தீர்வு: நெடுங்கேணியில் கொதித்தெழுந்த முதியவர் (Video)
மீண்டும் ஆயுதம் தூக்கினாலே எமக்கு தீர்வு கிடைக்கும் என வவுனியா - நெடுங்கேணியில் முதியவர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தின் போது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார். கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் தொனிப்பொருளில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையோடு நீதிக்கான மக்கள் அமைப்பினால் நெடுங்கேணி கந்தசாமி ஆலய முற்றத்தில் நேற்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இந்த மண்ணிலே ஏன் பிறந்தோம் என்றுதான் சிந்திக்க தோன்றுகின்றது. பட்டதாரிகள் மாணவர்கள் உரிமைக்காக போராடிய போது பயங்கரவாத சட்டம் என்று கூறி கைது செய்கிறார்கள். ரணில் விக்ரமசிங்கவிற்கு நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு ஒரு ஆசனம் கூட இல்லை. அவர் எங்களுக்கு ஆட்சி புரிவதென்றால் எவ்வாறு, இது பாரத பரம்பரை, இது வன்னிமண் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். முதலாம் இணைப்பு வவுனியா - நெடுங்கேணி கந்தசாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையோடு நீதிக்கான மக்கள் அமைப்பினால் நெடுங்கேணி கந்தசாமி ஆலய முன்றலில் நடத்தப்பட்டுள்ளது. நூறு நாள் செயற்திட்டத்தில் 24ஆம் நாள் நிரந்தரமான அரசியல் தீர்வை வலியுறுத்தி இடம்பெற்று வரும் நூறு நாள் செயற்திட்டத்தின் 24ஆம் நாளான இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘கௌரவமான உரிமைக்கான மக்கள் குரல், மக்கள் குரல் ஓய்ந்திருந்ததே தவிர ஒருகாலமும் ஒடுங்கியிருக்கவில்லை, ஜனநாயக பாதையில் மக்களே மக்களுக்காய்’ போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?