சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களில் முன்னேற்றமில்லை - ரணில் கடும் பிரயத்தனம்
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களில் முன்னேற்றங்கள் எவையும் ஏற்படாத நிலையில், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் மீண்டும் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது சிறிலங்கா அரசாங்கத்தின் மின் கட்டண திருத்தம், மதுவரிச் சட்டம் போன்றவற்றின் சீர்திருத்த முன்மொழிவுகளைக் கோரியுள்ள நாணய நிதியம் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அதனை வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்கா எதிர்நோக்கும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடனான மற்றுமொரு சுற்று கலந்துரையாடல் இன்று பிற்பகல் அதிபர் அலுவலகத்தில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
சாதகமான கருத்து பரிமாற்றம்
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களில் முன்னேற்றமில்லை - ரணில் கடும் பிரயத்தனம் | Imf Visit Sri Lanka Crisis
இணையவழி ஊடாக ரணில் விக்ரமசிங்க நாணய நிதியப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியிருந்தார். இந்தக் கலந்துரையாடலில் இரு தரப்பினரும் சாதகமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும் மின் கட்டணத் திருத்தம், கலால் சட்டம் போன்ற கூடுதல் தகவல்களுக்கு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அவ்வாறு கோரப்பட்ட தகவல்களை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழங்குமாறும் கோரியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி மற்றும் சட்ட ஆலோசகர்கள் இன்றைய கூட்டத்தில் இணைந்ததுடன், எதிர்வரும் 31 ஆம் திகதி புதன்கிழமை மற்றுமொரு சுற்று கலந்துரையாடலுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்தி அற்ற நிலை
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களில் முன்னேற்றமில்லை - ரணில் கடும் பிரயத்தனம் | Imf Visit Sri Lanka Crisis
ஏற்கனவே கடந்த புதன்கிழமை ரணில் விக்ரமசிங்கவை சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் நேரடியாக சந்தித்திருந்த போதிலும் சாதகமாக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்படும் நிலையில், இந்தக் கலந்துரையாடலை ரணில் விக்ரமசிங்க, இணைய வழி தொழல்நுட்பத்தின் ஊடாக நடத்தியுள்ளார்.
இதில் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூயர், பிரதித் தலைவர் மசாஹிரோ நோசாகி, சர்வதேச நாணய நிதியத்தின் சிறிலங்காவுக்கான நிரந்தரப் பிரதிநிதி மற்றும் அதிபரின் தலைமை அதிகாரியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்