முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 848 சீனா விடுதலைபுலிகளிடம் பேரம் பேசியது,

திருகோணமலையை வைத்து விடுதலைப் புலிகளிடம் பேரம் பேசிய சீனா! கொடுக்கப்பட்ட பதிலடி
திருகோணமலையை வைத்து விடுதலைப் புலிகளிடம் சீனா பேரம் பேசியது எனவும் அதனை விடுதலைப் புலிகள் மறுத்தனர் எனவும் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் அய்யாநாதன். எமது ஊடகத்தின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ 1987இல் மேற்கொள்ளப்பட்ட இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் இருக்கக்கூடிய முக்கிய விடயமாக, இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கைக்கும் இலங்கை தன் மண்ணைத் தரக்கூடாது என்ற முக்கிய சாராம்சம் பதிவிடப்பட்டிருந்தது. அப்படியான சூழலே அன்றைய காலகட்டத்தில் நிலவியது. ஆனால் தற்போது அந்த நிலை இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. அந்த நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. செயற்கைக்கோள்களின் துல்லியமான தகவல் வழங்கல் திருகோணமலையை வைத்து விடுதலைப் புலிகளிடம் பேரம் பேசிய சீனா! கொடுக்கப்பட்ட பதிலடி | Yuan Wang5 China Spy Ship Ltte India Safe இறுதி யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியை எடுத்துக்கொண்டால் உலக நாடுகளினுடைய செயற்கை கோள்கள் எல்லாம் விடுதலைப் புலிகளினுடைய போர் தளபாடங்களை காட்டிக்கொடுத்து அழிவிற்கு முக்கியமான காரணமாக இருந்தது. அதனை வைத்து ஏறத்தாழ 10இற்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டது. அத்தோடு ஆயுதக் கிடங்குகளும் இவ்வாறான செயற்கைக்கோள்களின் துல்லியமான தகவல் வழங்குதல் மூலமாக தாக்கி அழிக்கப்பட்டன. விடுதலைப் புலிகளுடைய பின்னடைவுக்கு முக்கியமாக இந்த கப்பல்களின் மூழ்கடிப்பே காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால் விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்த காலம் வரைக்கும் இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கு காரணம், விடுதலை புலிகள் இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கைக்கும் எந்த நாடு முன் வந்தாலும் அதனை அனுமதிக்கவில்லை. விடுதலைப் புலிகளிடம் பேரம் பேசிய சீனா திருகோணமலையை வைத்து விடுதலைப் புலிகளிடம் பேரம் பேசிய சீனா! கொடுக்கப்பட்ட பதிலடி | Yuan Wang5 China Spy Ship Ltte India Safe திருகோணமலையை வைத்து விடுதலை புலிகளுடன் சீனா பேரம் பேசல்களை மேற்கொண்டிருந்தது. ஆனால், விடுதலைப் புலிகளின் தலைவரைப் பொறுத்த வரைக்கும் அவர் ஒரு விடயத்தில் தெளிவாகவே இருந்தார். அது என்னவென்றால், இந்தியாவுடன் தமக்கு இருக்கக்கூடிய ஒரு புரிதல் பல்வேறு காரணங்களால் தட்டிக் கழிக்கப்படுகின்றது எனும் அரசியல் பின்னணியை உணர்ந்தவராக இருந்தார். ஆனாலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் மீது விசாரணை முடிவடையாத நிலையிலேயே குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதன் உண்மை தன்மை இதுவரை வெளிப்படவில்லை. 2009 ஆம் ஆண்டு போருக்கு பின்னர் தன்னை கட்டமைத்துக்கொள்ளக்கூடிய பலம் இலங்கைக்கு இல்லாத நிலையில் அது சீனாவை சார்ந்தது. சீனா மட்டுமல்ல பல நாடுகளை சார்ந்தது. சீனாவுடன் ஆதரவு அல்லது சார்புத் தன்மை இருந்தால் ஏனைய நாடுகள் இலங்கைக்கு உதவ முன் வராது. இவ்வாறு பல நாடுகளின் உதவியுடன் தமிழினத்தினுடைய விடுதலைப் போராட்டத்தை அழித்த பிறகு தான் இலங்கை அடிமைத்தனத்துக்குள் உட்பட்டது” என்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?