முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 900 வவுனியாவில் பண்டாரவன்னியன் சதுக்கம்

வவுனியாவில் பண்டாரவன்னியன் சதுக்கம் பெயர்ப் பலகை அகற்றம்: மக்கள் விசனம் (Photos)
தேசிய வீரர் மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் எனும் பெயர்ப்பலகை வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 4 நாட்களின் பின் நீக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தேசிய மாவீரன் பண்டார வன்னியனின் 219 ஞாபகார்த்த விழாவினை முன்னிட்டு வவுனியா நகரசபையினரினால் கடந்த 25ஆம் திகதி நகர மத்தியில் தேசிய மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் என பெயர்ப் பலகை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெயர்ப் பலகை திறந்து வைக்கப்பட்டு 4 நாட்கள் கடந்த நிலையில், 29ஆம் திகதி குறித்த பெயர்ப் பலகை வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடுபவர்களினால் அகற்றப்பட்டுள்ளது. வவுனியாவில் பண்டாரவன்னியன் சதுக்கம் பெயர்ப் பலகை அகற்றம்: மக்கள் விசனம் (Photos) | Vavuniya Name Board Remove
வீதி அபிவிருத்தி பணி இவ்விடயம் தொடர்பில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடுபவர்களிடம் கேட்ட போது, குறித்த வீதி செப்பனிடப்படும் பணிகள் எமது நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுவதுடன், அபிவிருத்தி பணிகளுக்கு இடையூரான நிலையில் குறித்த பெயர்ப் பலகை காணப்பட்டமையினால் அதனை நாம் அகற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். வவுனியாவில் பண்டாரவன்னியன் சதுக்கம் பெயர்ப் பலகை அகற்றம்: மக்கள் விசனம் (Photos) | Vavuniya Name Board Remove பெயர்பலகை வைப்பதற்குரிய நடவடிக்கை வவுனியாவில் பண்டாரவன்னியன் சதுக்கம் பெயர்ப் பலகை அகற்றம்: மக்கள் விசனம் (Photos) | Vavuniya Name Board Remove இது தொடர்பில் வவுனியா நகரசபையினரிடம் கேட்ட போது, வீதி அபிவிருத்தி பணிக்காக பெயர்ப் பலகை அகற்றப்பட்டுள்ளதுடன், பணிகள் நிறைவடைந்த பின்னர் முன்னைய பெயர்ப் பலகையினை விட சிறப்பான ஓர் பெயர்ப் பலகையினை அப்பகுதியில் வைப்பதற்குரிய நடவடிக்கையினை தாம் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெறுகின்றதாக தெரிந்தும் அவசரமாக பெயர்ப் பலகையினை திறந்து 4 நாட்களில் அது அகற்றப்பட்டமை மக்கள் மத்தியில் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளதுடன், சபை நிதியும் வீண் விரயம் செய்யப்பட்டுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?