முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 895 கொழும்பில் வெடித்த கலவரம்!

கொழும்பில் வெடித்த கலவரம்! தொடரும் பதற்றம்!
போராட்டக்காரர்களை விரட்டிப் பிடிக்கும் காவல்துறை - நேரடி கொழும்பு - மருதானையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில், போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் விரட்டிச் சென்று கைது செய்யும் நடவடிக்கையையும் ஆரம்பித்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். மருதானையிலிருந்து இன்று காலை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், குறித்த போராட்டத்திற்கு எதிராக பெறப்பட்ட தடை உத்தரவை போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் வாசித்து காட்டியுள்ளனர். நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் கொழும்பில் வெடித்த கலவரம்! தொடரும் பதற்றம்! போராட்டக்காரர்களை விரட்டிப் பிடிக்கும் காவல்துறை - நேரடி ரிப்போர்ட் | Anti Government Protest Colombo Protest Live ஆர்ப்பாட்டப் பேரணி தடை உத்தரவை மீறி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு கோட்டையை நோக்கி நகர முற்பட்ட போது மருதானை டெக்னிக்கல் வீதிப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்வதற்கான தயார் நிலை இருந்தததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பில் வெடித்த கலவரம்! தொடரும் பதற்றம்! போராட்டக்காரர்களை விரட்டிப் பிடிக்கும் காவல்துறை - நேரடி ரிப்போர்ட் | Anti Government Protest Colombo Protest Live இருப்பினும் எதிர்ப்பு பேரணியானது பொரளை பகுதியை நோக்கி திரும்பி மருதானை - டீன்ஸ் வீதிப்பகுதியை நோக்கி பயணத்தை ஆரம்பித்த நிலையில் டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்சிற்கு முன்பாக வீதியை மறித்து காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்க கூட்டமைப்புகள், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ஆகியோரின் இணைவில் இப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?