முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 823 நீரும் வாழ்ந்து உனது சமுகத்தையும் வாழவை.

கனடாவில் பலரின் பாராட்டைப்பெற்ற ஈழத்து இரட்டைச் சகோதரிகள்!
கனடாவில் இலங்கைத் தமிழ் வம்சாவளி சகோதரிகள் குழந்தைகளுக்கான மருத்துவ அறிவியல் புத்தகங்களை எழுதிவருகின்ற நிலையில் குறித்த சகோதரிகளுக்கு பலரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர். கனடா வாழ் இரட்டைச் சகோதரிகள் குழந்தைகளுக்கான மருத்துவ அறிவியல் புத்தகங்களை எழுதும் அசாதாரணமான வேலையை செய்து வருகின்றனர். அவர்கள் இப்போது புதிதாக தடுப்பூசிகள், உடல்நலம் மற்றும் பன்முகத்தன்மை பற்றிய குழந்தைகளுக்கான புத்தகங்களை எழுதுகின்றனர். கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் பிராம்ப்டன் பகுதியில் வசிக்கும் இலங்கை வம்சாவளி தமிழர்களான சுரபி மற்றும் ஸ்வாதி அன்பழகன். கனடாவில் பலரின் பாராட்டைப்பெற்ற ஈழத்து இரட்டைச் சகோதரிகள்! | Elam Twins Who Are Admired By Many In Canada 19 வயதாகும் இவர்கள், இந்த இலையுதிர்காலத்தில் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ அறிவியல் படிப்பதற்காக இரண்டாம் ஆண்டில் நுழைகின்றனர். அவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் புத்தகங்களை எழுதுகிறார்கள். எழுத்து மற்றும் மருத்துவ அறிவியல் இரண்டின் மீதான தங்கள் காதலை குழந்தைகளுக்கான புத்தகங்கள் மூலமாக வெளிப்படுத்திவருகின்றனர். பிராம்ப்டனில் கோவிட் தொற்று கடுமையாக தாக்கியபோது கடந்த கோடை மாதங்களில் ஒரு தடுப்பூசி கிளினிக்கில் தன்னார்வலர்களான இருவரும் பணியாற்றியுள்ளனர். அப்போது தான் அவர்களின் முதல் புத்தகத்திற்கான யோசனை வந்தது. கிளினிக்கில் குழந்தைகளுடன் இருக்கும் குடும்பங்களைப் பார்த்தபோது, ​​தடுப்பூசி போடுவது பற்றி குழந்தைகள் புத்தகத்தை உருவாக்க நினைத்தார்கள். இது குறித்து பேசிய சுரபி, கனடாவில் பலரின் பாராட்டைப்பெற்ற ஈழத்து இரட்டைச் சகோதரிகள்! | Elam Twins Who Are Admired By Many In Canada "பள்ளிக்குச் செல்ல முடியாததால் குழந்தைகளின் வாழ்க்கை எவ்வாறு கடுமையாக மாறியது என்பதைப் பார்ப்பது அல்லது நிலைமையைப் புரிந்துகொள்வதுதான் சமூகத்திற்குத் திரும்பக் கொடுக்க எங்களுக்கு உத்வேகம் அளித்தது" என்று கூறினார். அவர்கள் எழுதும் குழந்தைகள் புத்தகங்க தொடருக்கு Twin Tales.என பெயரிட்டுள்ளனர். அவர்கள் தங்கள் முதல் புத்தகமாக Ahana Got A Vaccine என்ற புத்தகத்தை எழுதினர். தொடர்ந்து, Mom, Dad! Please Get The Vaccine!, I am Beautiful மற்றும் The Race For Change ஆகிய மூன்று புத்தகங்களை எழுதியுள்ளனர். ஐந்தாவதாக இப்போது, தடுப்பூசிகள், உடல்நலம் மற்றும் பன்முகத்தன்மை பற்றி புத்தகம் எழுதிவருகின்றனர். இந்த புத்தகங்களை அவர்கள் பல தளங்களில் விற்பது மட்டுமல்லாமல், இலங்கையில் உள்ள தமிழ் குழந்தைகளுக்கு இலவசமாகவும் சுரபி மற்றும் ஸ்வாதி அனுப்பி வைக்கின்றனராம்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?