வெளியே தலைகாட்டக் கூடாது! கோட்டாபயவுக்கு நிபந்தனை விதித்த தாய்லாந்து
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தின் தலைநகரின் மையப்பகுதியில் உள்ள பாங்கொக்கில் உள்ள விடுதியில் தங்கியுள்ள நிலையில், எக்காரணம் கொண்டும் விடுதியை விட்டு வெளியே வரவேண்டாம் என அவரிடம் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சி காரணமாக கோட்டாபய ராஜபக்ச கடந்த மாதம் 13 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறி, மாலைதீவு சென்ற அவருக்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் சிங்கப்பூருக்கு பறந்தார்.
அங்கிருந்தபடியே அதிபர் பதவியை அவர் இராஜினாமா செய்தார். இதையடுத்து இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.
சிங்கப்பூரில் அவருக்கு முதலில் 14 நாட்கள் தங்க அனுமதிக்கப்பட்டது. இதன் பின்னர் கடந்த 11ஆம் திகதி வரை அவருக்கு சிங்கப்பூரில் தங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றுடன் அவருக்கு சிங்கப்பூரில் விசா முடிந்தது.
இதனால் அவர் சிங்கப்பூரில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். பின் சிங்கப்பூரில் இருந்து நேற்று இராணுவ விமானம் மூலம் தாய்லாந்துக்கு புறப்பட்டார். அங்கு சென்ற அவருக்கு மனிதாபிமான அடிப்படையில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்புக்காக சாதாரண உடையில் காவல்துறையினர் விடுதியை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
பாதுகாப்புக் காரணங்களுக்காக தாய்லாந்தில் தங்கியிருக்கும் வரை விடுதியை விட்டு எக்காரணம் கொண்டும் வெளியே வரவேண்டாம் என தாய்லாந்து காவல்துறையினர் கோட்டாபய ராஜபக்சவை கேட்டுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இலங்கையில் இருந்து தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச இதுவரை பொதுவெளியில் தலைகாட்டவில்லை. தாய்லாந்தில் தற்போது தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்ச தனது 90 நாள் விசா காலம் முடிந்ததும் அங்கிருந்து இலங்கைக்கு திரும்பலாம் என்று செய்திகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்