மாணவர்களை வன்கொடுமை புரிந்த பிரபல பாடசாலை அதிபர் கைது
பல மாணவர்கள் துஷ்பிரயோகம்
இரத்தினபுரியில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் அதிபர், பல மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) தெரிவித்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவர்களை வன்கொடுமை புரிந்த பிரபல பாடசாலை அதிபர் கைது | Principal In Custody Sexually Abusing Students
பணப்பரிசில்கள் வழங்கும் அதிபர்
குறித்த பாடசாலை மாணவர்களை அதிபர் வெகுநாட்களாக தனது விடுதிக்கு அழைத்து அவர்களுக்கு பணப்பரிசில்கள் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் நேற்று (23) இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர், கடுமையான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாணவர்களை வன்கொடுமை புரிந்த பிரபல பாடசாலை அதிபர் கைது | Principal In Custody Sexually Abusing Students
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் நடக்கும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து 1929 - என்ற தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிறுவர் உதவி எண்ணுக்கு கூடிய விரைவில் தெரிவிக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்