முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 796 ஜனாதிபதி ரணிலுக்கு பெரும் அதிஷ்டம்

ஜனாதிபதி ரணிலுக்கு பெரும் அதிஷ்டம் - பிரபல ஜோதிடர் வெளியிட்ட தகவல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜாதகம் மிகவும் பலமாக உள்ளதாக பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் ஜாதகத்திற்கமைய அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்ற முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அவர் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இணைய சேவையொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரணில் ஒரு போதும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றின் மூலம் ஜனாதிபதியாக முடியாதென சரியாக கூறிய ஜோதிடரே இவ்வாறு கூறியுள்ளார். அதற்கமைய, ரணிலின் இரண்டு வருட ஜனாதிபதி பதவியை எந்த ஒருவர் வன்முறையாலும், போராட்டத்தினாலும் முடிவுக்கு கொண்டு வரமுடியாது. அவரது ஜாதகம் தற்போது ராஜயோகத்தில் உள்ளது. தற்போதைய ராஜயோகம், எலிசபெத் மகாராணி மற்றும் பிடெல் கெஸ்ரோக்கு மாத்திரமே உள்ளது. இந்த ஜாதகத்தில் குரு உச்சத்தில் உள்ளது. அது மிகப்பெரிய அதிஷ்டத்தை ஏற்படுத்தும். ரணில் விக்ரமசிங்கவை ஒக்டோபர் மாதம் விரட்டிவிடலாம் என சிலர் கூறுகின்றார்கள். எனினும் இரண்டரை வருடங்களுக்கு ரணிலை அசைக்க முடியாது. அவர் பதவியில் நீடிப்பார். அதனை நிரூபிக்கும் வகையிலேயே ஜனாதிபதி தனது முதலாவது நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டுள்ளார். பெப்ரவரி மாதத்தின் 23ஆம் திகதியின் பின்னரே அவருக்கு இருந்த கிரகங்கள் நீங்கியுள்ளதுடன், அவரது எதிர்கால பயணத்தை ஒரு போதும் தடுக்க முடியாது. பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பதவி சில நாட்களில் பறிக்கப்படும். அவரது கெட்ட மனசே அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சஜித் மற்றும் அவரது குழுவினரின் ஆதரவையும் ரணில் பெறுவார். சர்வகட்சி அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும். அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஒரு போதும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. மக்கள் விடுதலை முன்னணியின் கொடூர செயல்களை மக்கள் மறந்துவிட்டனர். அநுர குமார அரகலய குழுவினர் தூண்டிவிட்டு பதவிகளை கைப்பற்ற முயற்சித்தாலும் அவரால் முடியாது. அவர்கள் செய்த கொடூரங்களை வார்த்தைகளினால் கூறி விடமுடியாதென ஜோதிடர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?