முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 782 அவுஸ்திரேலியாவை அதிர வைத்த சம்பவம்

அவுஸ்திரேலியாவை அதிர வைத்த சம்பவம் - மூவர் ரத்த வெள்ளத்தில்..! ஹெலிகொப்டரில் மீட்பு பணி
அவுஸ்திரேலியாவை அதிர வைத்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குயின்ஸ்லாந்து - போகியில் உள்ள கால்நடைகள் பண்ணை மீது நேற்று (04) பயங்கர துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் குண்டு பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் தோய்ந்து உயிரிழந்ததுடன், மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார். மூவர் ரத்த வெள்ளத்தில் அவுஸ்திரேலியாவை அதிர வைத்த சம்பவம் - மூவர் ரத்த வெள்ளத்தில்..! ஹெலிகொப்டரில் மீட்பு பணி | Shooting In Bogie Queensland Three Dead Australia சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்துசென்று துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவரை மீட்டு, ஹெலிகொப்டர் மூலம் மக்கே நகரில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள், படுகாயமடைந்தவரது உறவினர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர், மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி விட்டார். அவரை தேடும் வேட்டையை காவல்துறை முடுக்கி விட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் அவுஸ்திரேலியாவை அதிர வைத்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?