அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு குழந்தைகள் பலி அவுஸ்திரேலியா - மெல்பன் தென் மேற்கிலுள்ள Werribee பகுதியில், வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி நான்கு பிள்ளைகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். Mantello Drive-இலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீயணைப்புப்படையினர் அங்கு வந்தபோது பெரியளவில் தீ பரவிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது வீட்டின் மேற்கூரை முழுவதுமாக உடைந்துவிட்டதாகவும், தீயை கட்டுப்படுத்த 40 தீயணைப்பு வீரர்கள் போராட வேண்டியிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. இச்சம்பவத்தில் 10 வயது மற்றும் 3 வயதுடைய இரு ஆண் பிள்ளைகளும், 6 வயது மற்றும் 1 வயதுடைய இரு பெண் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். தீயிலிருந்து தப்பித்த பெற்றோரும், 8 வயதுச் சிறுவனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பிலும், இச்சம்பவம் சந்தேகத்திற்கிடமானதா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********