முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b593

எவன் தமிழன் எனக்கேட்ட இறுமாப்பை நீ உடைத்தாய்!
நெருப்புக்கு நேரியனே! ஊரார்கள் வலி வாங்கி உள்ளுக்குள் நீ துடித்தாய்! உருமறைத்த புலியாகி உயிருக்குள் நீ சிலிர்த்தாய்! பள்ளிக்குச் செல்லுவதை படிப்படியாய் நீ குறைத்தாய்! பதுங்குதற்கு முடிவெடுத்துப் படங்களையும் நீ மறைத்தாய்! விளையாடும் வயதினிலே விளையாட்டைத் துண்டித்தாய்! வீணர்களின் வெறிச்செயலை வெடிகுண்டால் தண்டித்தாய்! பாராண்ட மன்னர்களை படிப்பகத்தில் சந்தித்தாய்! பழந்தமிழர் புகழ்மீட்க பண்போடு சிந்தித்தாய்! எங்கென்ற ஏக்கத்தில் இளைத்தாளே அன்புத்தாய்! இவனன்றோ பிள்ளையென்று இனித்தாளே ஈழத்தாய்! ஈழத்தின் இருளழிக்க எழுந்து வந்த சூரியனே! ஈனத்தின் கருவழிக்க இடிகிழித்த வீரியனே! கண்ணிமைக்க மறந்துவிட்ட கடுமுழைப்புக் காரியனே! கண்டுசொல்ல கறையில்லா நெருப்புக்கு நேரியனே! இழந்திருந்த வீரத்தை இழுத்து வந்து போட்டவனே! சிதைந்திருந்த தமிழினத்தைச் சேர்த்துவைத்து மூட்டவனே! மரணத்தை மடியேந்தி மாதாவாய்க் கேட்டவனே! மறத்திமிரில் தமிழ்க்குடியின் மானத்தை மீட்டவனே! துளியளவும் நெறிபிறழா தூயமனக் காவலனே! துவண்டதமிழ் துளிர்க்கவென தூக்கிவிடும் ஆவலனே! தான்செய்த சிறுபிழைக்கும் தண்டனைகள் ஏற்றவனே! தாய்மானம் காப்பதற்காய் தன்மானம் நூற்றவனே! எவன் தமிழன் எனக்கேட்ட இறுமாப்பை நீ உடைத்தாய்! இவன்தமிழன் எனும்பெருமை வரலாற்றை நீ படைத்தாய்! இரக்கமற்ற தாயாகி எம்பெண்ணை புலிசெய்தாய்! அடுப்படியின் வரலாற்றை அதனாலே பலிசெய்தாய்! தாயுக்கும் மேலாகத் தாயாகி வந்தவனே! தலைநிமிர்வு ஊக்கத்தைத் தமிழருக்குத் தந்தவனே! உனக்கின்று பிறந்தநாள்! எங்கள்உயிரோடும் நரம்பெங்கும் உணர்வோடம் ஏறிவந்து மூத்ததமிழ்த் தொன்மத்தை மொண்டு மொண்டு ஊற்றி எங்கள்முகம் கழுவிவிட்டவனே! முகவரியும்தந்தவனே! அன்பாண்டு அறிவாண்டு ஆற்றல்மிகு வீரத்தில் படையாண்டு பண்டைய நம்பழுதில்லா இயற்கை தமிழ்ப்பண்பாண்டு பல்லாண்டு பல்லாண்டு பாரிலுள தமிழர்களின் மனமாண்டு வாழ்க வாழ்கவென மகிழ்ச்சியிலே வாழ்த்துகிறோம் மாண்புமிகு எம் தலைவா! வாழ்த்துகிறோம் எம் தலைவா!
– பாவலர் . அறிவுமதி. “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?