முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 448 பிரித்தானியாவில் உள்ள வைத்தியரான மகளிடம் செல்லும் Murugan Nalini | #udar...


பிரித்தானியாவில் உள்ள வைத்தியரான மகளிடம் செல்லும் முருகன் மற்றும் நளினி

Bandaranaike International AirportLondonRajiv GandhiGovernment Of IndiaSri Lanka Government
 By Dhayani 33 minutes ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

ராஜீவ் காந்தி (Rajiv Gandhi) கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் விடுதலையான முருகன் மற்றும் அவரது மனைவி நளினி ஆகியோர் பிரித்தானியாவில் இருக்கும் தனது மகளிடம் செல்லும் முடிவில் உள்ளதாகவும், இந்த முடிவிற்கு இலங்கை மற்றும் இந்திய அரசு தடைகளை ஏற்படுத்தாது என சட்டத்தரணி புகழேந்தி (Pugalenthi) தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தமிழக சிறப்பு அகதி முகாமில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு உயிராபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தினால் இலங்கைக்கு நாடு திரும்பும் முடிவினை எடுத்திருந்தனர்.

அதாவது முருகன், ரொபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தாங்கள் விரும்பும் நாடுகளுக்கு செல்ல முடியாதவாறு இலங்கை அரசு சர்வதேச நாடுகளுக்கு செல்லும் கடவுச்சீட்டினை வழங்காது, ஒரு வழி கடவுச்சீட்டாக இலங்கைக்குள் மாத்திரம் நுழையும் கடவுச்சீட்டினை வழங்கியிருந்தது.

இதன் காரணமாக அவர்கள் தாங்கள் விரும்பும் நாடுகளுக்கு செல்லும் முடிவிலிருந்து பின்வாங்கி இலங்கைக்கு நாடு திரும்பும் முடிவினை எடுத்திருந்தனர்.

ஒரு குடிமகனுக்கு தான் விரும்பும் வெளிநாடுகளுக்கு சென்றுவரும் அடிப்படை உரிமை காணப்படும் நிலையில், முருகன் இலங்கையிலிருந்து சர்வதேச கடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்து பிரித்தானியாவில் உள்ள தனது மகளை காணும் வாய்ப்பினை இலங்கை அரசு தடுக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நளினி இந்தியாவில் இருந்தவாறு பிரித்தானிய கடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்து மகளுடன் இணையும் சட்ட போராட்டம் நிறைவுக்கு வரும் என்றும், இவர்கள் விரைவில் தங்களது மகளுடன் சேர்ந்து சராசரி வாழ்க்கைக்கு பழகிவிடுவார்கள் என்றும்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?