தமிழர் பகுதியில் தொடருந்து மோதி ஒருவர் பலி
By Dilakshan 7 hours ago
வவுனியா தேக்கவத்தை பகுதியில் தொடருந்து மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது, இன்று(17) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழில் இருந்து அனுராதபுரம் நோக்கிசென்ற தொடருந்து தேக்கவத்தை பகுதியில் சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் படுகாயமைடந்த முதியவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் தேக்கவத்தை பகுதியை சேர்ந்த 67 வயதான முதியவர் ஒருவரே உயிழந்துள்ளார்.
இந்நிலையில், விபத்து தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்