தமிழீழப்பகுதியில் கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த சுகாதார சேவைகள் பணிப்பாளர்!
Sri Lanka PoliceSri Lankan TamilsVavuniyaSri Lanka
3 hours ago
Shankar
வவுனியாவில் உள்ள பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (27-03-2024) மாலை ஓழந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
டிப்பர் வாகனமும் கப் வாகனமும் மோதுண்டு இவ் விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில் வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இரவு 7.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்