முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 385 கனடாவில் இருந்துவந்த நபர் நடந்தது என்ன?

 

கனடாவில் இருந்துவந்த நபர் யாழ்ப்பாண இளைஞனுக்குச் செய்தவேலை .

கனடா கனவில் இருந்த யாழ்ப்பாண இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Shock Jaffna Youth Who Dreamed Of Canada
JaffnaSri Lanka Police InvestigationCanadaCrime
 5 hours ago
Sulokshi

Sulokshi

  •  
  •  
  •  
Follow us on Google News

  யாழ்ப்பாண இளஞர் ஒருவரை கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து 43 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று மோசடி செய்தவர் யாழ்ப்பாண பொலிஸாரால் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தன்னை ஊடகவியலாளர் என, இளைஞரிடம் அறிமுகப்படுத்தி மோசடியில் ஈடுபட்டவரே இவ்வாறு கைதாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


 43 இலட்ச ரூபாய் மோசடி

கனடாவில் மாபெரும் இசை நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாகவும், அதற்காக இலங்கையில் இருந்து சில ஊடகவியலாளர்களை அழைத்து செல்ல உள்ளதாகவும் , அவர்களுடன் கனடாவில் இறக்கிவிடுவதாக யாழ் இளைஞனுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.

மசாஜ் நிலையம் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் செய்த செயல்; அதிரடியாக பணி நீக்கம்!

மசாஜ் நிலையம் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் செய்த செயல்; அதிரடியாக பணி நீக்கம்!

 அதற்காக  ஊடகவியலாளர்   அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறி இளைஞனிடம் இருந்து 43 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று, ஊடக நிறுவனம் ஒன்றின் அடையாள அட்டையையும் வழங்கியுள்ளார்.

கனடா கனவில் இருந்த யாழ்ப்பாண இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Shock Jaffna Youth Who Dreamed Of Canada

பணத்தினை பெற்று நீண்ட காலமாகியும், கனடாவில் இசை நிகழ்வுக்கான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறுவதாக இளைஞன் அறியாத நிலையில், தனது பணத்தினை மீள தருமாறு கோரியதை அடுத்து சந்தேக நபர் , இளைஞனின் தொடர்பை துண்டித்துள்ளார். அதனால் இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸார் விசாரணை

அவரது முறைப்பாட்டின் பிரகாரம் , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சந்தேக நபர் வவுனியாவில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

பிரபல ஆடைத் தொழிற்சாலை வர்த்தகரின் லீலைகள்; அம்பலத்திற்கு வந்த தகவல்களால் அதிர்ச்சி!

பிரபல ஆடைத் தொழிற்சாலை வர்த்தகரின் லீலைகள்; அம்பலத்திற்கு வந்த தகவல்களால் அதிர்ச்சி!

அதேவேளை, இளைஞனுக்கு வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தபோது , அந்த ஊடக நிறுவனத்தினை மோசடி செய்த நபரே நடாத்தி வந்தமையும் தெரிய வந்துள்ளது.

கனடா கனவில் இருந்த யாழ்ப்பாண இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Shock Jaffna Youth Who Dreamed Of Canada

பொலிஸாரின் தீவிர விசாரணைகளை அடுத்து, தலைமறைவாகி இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , குறித்த நபர் பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?