முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 381 தொடரும் தமிழ் தேசிய இனப் பிரச்சினை: சுரேஷ் பிரேமச்சந்திரன் பகிரங்கம்

 

தொடரும் தமிழ் தேசிய இனப் பிரச்சினை: சுரேஷ் பிரேமச்சந்திரன் பகிரங்கம்

தொடரும் தமிழ் தேசிய இனப் பிரச்சினை: சுரேஷ் பிரேமச்சந்திரன் பகிரங்கம் | Suresh Premachandran Speech At Vavuniya
Suresh PremachandranSri Lanka
 2 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

 ஐக்கியப்பட்டு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி பல லட்சம் வாக்குகளை பெறுவதன் மூலமே தமிழ் தேசிய இனப் பிரச்சினை இன்னமும் இருக்கின்றது என்பதை மீள சொல்ல முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (24.03.2024) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் மக்டொனால்ட்ஸ் கிளைகள் அனைத்தும் மூடல்

இலங்கையில் மக்டொனால்ட்ஸ் கிளைகள் அனைத்தும் மூடல்

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் பல்வேறு பட்ட தடைகளை தாண்டி வந்திருக்கின்றோம். எங்களுடைய ஆயுதப் போராட்டம் தொடங்கி 40 வருடங்கள் முடிந்து விட்ட நிலையில் என்ன காரணத்திற்காக ஆயுதப் போராட்டம் தொடங்கியதோ அந்த நிலமை மோசமாக இன்றும் இருக்கிறது.

இலங்கையில் இதுவரை வந்த ஆட்சியாளர்கள் ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பவர்களாக இதுவரை இல்லை.


ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இது வரை தீர்வு எட்டப்பட்டது என்றால் அது இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் ஒன்று தான் எமது அரசியல் சாசனத்தில் உள்ள விடயமாக உள்ளது.

13 ஆவது திருத்தத்தில் உள்ள மாகாணசபையைக் கூட தருவதற்கு தயாரில்லை. கடந்த 6, 7 வருடங்காளாக அதற்கு தேர்தலும் நடத்தப்படாத நிலை உள்ளது. 

மாகாணங்களுக்குரிய அதிகாரங்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதேநேரம், இந்தவருடம் தேர்தலைப் எதிர்நோக்கும் ஒரு வருடமாகவும் இருக்கின்றது.

தொடரும் தமிழ் தேசிய இனப் பிரச்சினை: சுரேஷ் பிரேமச்சந்திரன் பகிரங்கம் | Suresh Premachandran Speech At Vavuniya

ஜனாதிபதி தேர்தல் நடந்தே ஆக வேண்டும் என்ற நிலை இருக்கின்றது. முதலில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஒரு சில கருத்துக்கள் உருவாகி வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலைகள் இருகின்றதா? இன்று பலமான பொதுஜன பெரமுன கட்சியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை எதிர் கொள்ளத் தயாரா? 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை கலைப்பதை ஏற்பார்களா? என்றால் அதற்கான சூழ்நிலைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். 

தொடரும் தமிழ் தேசிய இனப் பிரச்சினை: சுரேஷ் பிரேமச்சந்திரன் பகிரங்கம் | Suresh Premachandran Speech At Vavuniya

ஆகவே, இவ்வாறான நிலையில் ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளது.தமிழ் மக்கள் அதனை எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்பதும் இங்கு இருக்கக் கூடிய கேள்வியாகவுள்ளது. 

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியில் அங்கத்துவம் வகிக்கும் 5 கட்சிகள் கடந்த சில மாதங்களாக இவை தொடர்பான பல்வேறுபட்ட கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறுகின்றன” என தெரிவித்துள்ளார். 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?