இஸ்ரேலின் புதிய படையெடுப்பு : இத்தாலி கடும் எதிர்ப்பு
By Sumithiran 6 hours ago
காசா பகுதியின் தெற்கு நகரமான ரஃபா மீது இஸ்ரேலியப் படைகள் தரைவழி தாக்குதலை நடத்தவுள்ளதற்கு இத்தாலி தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
"ரஃபாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்கு நாங்கள் எங்கள் எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்துவோம், இது அந்த பகுதியில் திரண்டிருக்கும் பொதுமக்களுக்கு இன்னும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்" என்று இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான உதவிகளை வழங்க புதிய தரைவழிப்பாதை
பலஸ்தீனப் பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை பாதுகாப்பாக வழங்குவதை உறுதி செய்வதற்காக சைப்ரஸிலிருந்து காசா வரையிலான புதிய தரைவழிப் பாதைகள் மற்றும் கடல்வழிப் பாதையைத் திறப்பது முன்னுரிமை என்றும் அவர் மேலும் கூறினார்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்