தமிழர் பகுதியில் அரச மற்றும் தனியார் பேருந்துக்களில் உயிர் பயத்தில் பயணிக்கும் பயணிகள்!
By Shankar
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
நாட்டில் சமீப காலமாக அரச மற்றும் தனியார் பேருந்துகளின் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவ்வாறான விபத்துக்களில் உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன.
இவ்வாறான நிலையில் திருகோணமலை - யாழ்ப்பாணம் இடையே சேவையில் ஈடுபடும் அரச பேருந்தும், வவுனியா - யாழ்ப்பாணம் இடையே போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று செருகியவாறு பயணத்தை மேற்கொண்டுள்ளன.
இச்சம்பவம் இன்றைய தினம் (15-03-2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தின் போது, பயணிகள் மிகவும் அச்சத்தில் இருந்ததை அவதானிக்க முடிந்துள்ளது.
நாட்டில் இவ்வாறான செயலினால் எத்தனையோ விபத்துக்கள் இடம்பெற்ற போதும், சாரதிகளும், பொறுப்பான அதிகாரிகளும் அசமந்தமாக செயற்பட்டு பயணிகளின் உயிர்களுடன் விளையாடுவது மக்கள் மத்தியில் விசனத்தை
ஏற்படுத்தியுள்ளது.
JVP News
கருத்துகள்