தமிழர் தாயகத்தில் அதிகரிக்கும் சிங்கள - பௌத்தமயமாக்கல்: முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டம்
By Dilakshan
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள - பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டமானது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் நாளை (19) இடம்பெறவுள்ளது.
அத்தோடு, வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நெடுங்கேணி காவல்துறையினரால் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில், தமிழர் தாயகம் மீதான திட்டமிட்ட தொல்லியல் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகச் சமூகமாக அணிதிரள்வோம் என்று மாணவர் ஒன்றியம் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
IBC Tamil News
கருத்துகள்