முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 478 காலம் கடந்து நடைபெறும் ஆர்பாட்டம்

மாபெரும் மக்கள் பேரணி -தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் தீ சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம்
பல்கலைக்கழக மாணவர்கள், பாதிக்கப்பட்ட தரப்புக்கள், சிவில் சமூகங்கள் ஆகியோர் இணைந்தது முன்னெடுத்த வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி மாபெரும் மக்கள் பேரணி முல்லைத்தீவு நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் தீ சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் போது கருத்து தெரிவித்த, தவத்திரு வேலன் சுவாமிகள், மாவீரர்கள் எங்களுடைய தேசிய வீரர்கள் தங்களுடைய உயிரை தியாம் செய்தவர்கள், மாவீரச் செல்வங்களை தமிழ் மக்கள் அனைவரும் எப்பொழுதும் போற்றுகின்றார்கள். மாபெரும் மக்கள் பேரணி - தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அகவணக்கம் | Sri Lanka Independence Day Protest 2023
அப்படியான மாவீரர்களது வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ள பூமி உன்னத பூமி அப்படிப்பட்ட புனிதர்களுக்கு நாங்கள் வீரவணக்கத்தையும் அஞ்சலிகளையும் மரியாதைகளை செலுத்துகின்றோம். அதேவேளை வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இருக்கிற அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களும் தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும், ஒவ்வொரு மாவீரர் துயிலுமில்லத்தில் உள்ள ஏற்பாடு குழுக்கள் பராமரிப்புகளையும் நிகழ்வுகளையும் முன்னெடுக்கவேண்டும் என இந்த சந்தர்ப்பத்திலே அனைத்து மக்கள் சார்பிலும் தமிழ் உறவுகள் சார்பிலும் வலியுறுத்தி கொள்கின்றோம் எனவும் தெரிவித்தார். மேலும், அடுத்ததாக உடையார்கட்டில் இந்த பேரணி நடைபெற இருக்கிறது என்றும் அதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு நகரில் ஒரு பேரணி இடம்பெற்று அதன் பிற்பாடு இன்று மாலை முல்லைத்தீவு நகரை சென்றடைய இருக்கின்றது என தெரிவித்தார். அனைத்து உறவுகளும் எழுச்சியாக இந்த பேரணியில் இருந்து கலந்து கொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?