16 சிறுவர்களை பலியெடுத்தது கொரோனா
லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் இதுவரை 16 சிறுவர்கள் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போது 160 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 25 -க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தினமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மற்றும் நான்கு சிறுவர்கள் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். கொவிட் தொற்று உள்ள சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் போதுமான வசதிகள் இருப்பதாகவும், அவர்களுக்காக இதுவரை 300 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் கூறினார்.
"நோய் அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவமனைக்கு வரவும். எனவே நோய் வராமல் தடுக்க கவனமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்