ஒரே நாளில் அதிகளவான கொரோனா மரணங்கள் பதிவு!
இலங்கையில் நேற்றைய தினம்(18) கொவிட் தொற்றால் 186 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 6,790 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் இன்று 3,806 பேர் கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஒரே நாளில் நாட்டில் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள்