கொரோனாவை குணப்படுத்த மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை!
கொரோனா குணப்படுத்துவதற்கான மருந்துகள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள மருத்துவ நிபுணர் ஒருவர் சமூக ஊடகங்களில் கொரோனாவிற்கு கிசிச்சை என வெளியாகும் தகவல்களை நம்பவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், கொழும்பு பல்கலைகழக பேராசிரியர் பிரியதர்ஷினி கலப்பதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
கொரோனா வைரசிற்கான மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை ஆராய்ச்சிகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன தடுப்பூசி மாத்திரமே தற்போதுள்ள ஒரேயொரு சிகிச்சை என அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளின் அடிப்படையில் விட்டமின் சி, டி,ஜிங் ஆகியவற்றில் எடுப்பது பிரச்சினையில்லை என தெரிவித்துள்ள அவர் பலர் சமூக ஊடகங்களில் பல மருந்துகளை பரப்புகின்றனர் அவற்றை நம்பவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் காய்ச்சல் இருந்தால் பரசிட்டமோலை பயன்படுத்தலாம், மருத்துவர்கள் தெரிவித்த அளவிற்கே பரசிட்டமோலை பயன்படுத்தவேண்டும்,பெரியவர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு மூன்று தடவை இரண்டு குளிசை வீதம் எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் அல்லது குழந்தையின் உடல்நிறைக்கு ஏற்ப பரசிட்டமோலை பயன்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்றி மருந்தினை பயன்படுத்தவேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்