முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b282

 தமிழர்களுக்கான தீர்வு விவகாரம் - சர்வதேசத்தை நாடும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள்



இலங்கையில் நீண்டகாலமாக காணப்படும் அரசியல் பிரச்சினைகளுக்கு சர்வதேச நடுவர் மன்றத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும் என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.


இலங்கை அரசாங்கம் இதுவரை தேசிய பிரச்சனை தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ள நிலையில், இனிவரும் எந்தவொரு பேச்சுக்களையும் சர்வதேச நடுவர் முன்னிலையில் நடத்த வேண்டும் என அந்த அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.


இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறைகள் மற்றும் இனப்படுகொலைகள் காரணமாக புலம்பெயர் நாடுகளில் வாழும் 1மில்லியனுக்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்பதை பதிவு செய்ய விரும்புவதாக பதிவு செய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


இந்த நிலையில் தாம் தாயகத்திற்கு திரும்புவதற்கான தமது உரிமையை வலியுறுத்த விரும்புவதாகவும் புலம்பெயர் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


எனவே இலங்கையில் பல்லின மற்றும் பல மத சமூகங்களின் நீடித்த அமைதியையும் சகவாழ்வையும் கொண்டுவருவதற்கான எந்தவொரு பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் தீர்வின் வடிவமைப்பிலும் தாம் பங்குதாரர்களாக இருப்பதாக புலம் பெயர் அமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இலங்கைத் தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள தற்போதைய பிராந்திய உறுதியற்ற தன்மை காரணமாக சர்வதேச சமூகம் தலையிட்டு, தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வைக் கொண்டுவர உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இந்த நோக்கத்திற்காக, இந்திய அரசாங்கத்தின் அளப்பரிய ஆதரவுடன் அமெரிக்க அரசாங்கத்தின் அனுசரனை மூலம் தமிழர் தரப்புக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான அரசியல் பேச்சுவார்த்தைகள் பற்றிய சமீபத்திய உரையாடல்களை தாம் மேற்கொண்டுவருவதாகவும் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


இலங்கை அரசாங்கத்துடனான கடந்தகால நேரடி பேச்சுக்களின் பலனாக சிங்களத் தலைவர்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றாத பின்னணியில், எந்தவொரு பேச்சுவார்த்தையும் வெற்றிகரமாக முடிவடைவதற்கு சர்வதேச நடுவரோடு நடக்க வேண்டும் என்பதை தாம் உறுதியாகக் கூறுவதாக புலம்பெயர் அமைப்புக்கள் கூறுகின்றன.


ஐரோப்பா, பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்களும் அனைத்து அரசியல், மனித உரிமைகள் மற்றும் பொருளாதார கருவிகளுடன் இத்தகைய ஈடுபாட்டை தீவிரமாக ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் வேண்டும் எனவும் இந்த அமைப்புக்கள் கேட்டுக்கொண்டுள்ளன


. ராஜராஜ சோழ மன்னனின் புலிக்கொடியை

முள்ளி வாக்கால் நிகழ்வில் ஏற்றக் கூடாது என அடம் பிடித்தவர்களும் கீளே உள்ள விவரத்தில் இருக்கின்றார்கள். இவர்கள் தங்களின் எதிர் அல்லது எதிர்மாறன செயல்பாடுகளில் இருந்து விலக வேண்டும்.



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?