முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b284

 தமிழீழ கிழை நிறுவனமான உலகத் தமிழர் வரலாற்று மையம்சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றது.



பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழில்ல அடிக்கல் நாட்டு விழா


பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் தமிழில்ல கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.


இந்நிகழ்வில் மாவீர நினைவாலய நுழைவாயில் மற்றும் வணக்க தளங்களிலிருந்து காவி வரப்பட்ட அடிக்கற்களும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித மண்ணும் கட்டிடத்திற்கான அத்திவார பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.


குறித்த நிகழ்வு பொதுச்சுடர், ஈகைச்சுடர், தேசியக்கொடி ஏற்றல் போன்ற அம்சங்களுடன் ஆரம்பமாகியுள்ளது.


இந்நிகழ்வில் மாவீரர் குடும்பங்கள், போராளிகள், தேசிய செயற்பாட்டாளர்கள், தேச விடுதலையை நேசிக்கும் மக்கள் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.


இதன்போது,முள்ளிவாய்க்காலில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித மண்ணினை மாவீரர்களின் துணைவியர் இருவர் அத்திவார பகுதியில் தூவினர்.


இதனை தொடர்ந்து வருகை தந்திருந்த அனைவரது கைகளிலும் அடிக்கல் வழங்கப்பட்ட நிலையில், கற்களில் தமது மனம் நிறைந்த மாவீரர்களின் பெயர்களையும், வாழ்த்துச் செய்திகளையும் எழுதி அத்திவார பகுதியில் நடுகை செய்துள்ளனர்.


இதனையடுத்து குறித்த நிகழ்விற்கு வருகை தந்திருந்த பிரித்தானியாவின் அரசியல் பிரமுகர்களுக்கும், மக்களுக்குமான கருத்துக்கள் உரைகளாக வழங்கப்பட்டுள்ளது. 


இங்கிலாந்தில் வாழும் அனைத்து தமிழர்களும் இதற்கான அனைத்து பங்களிப்பையும் செய்து எமது அடுத்த தலைமுறைக்காக இதை பாதுகாப்பு பரமரிப்புக்காக தொடர்ந்து தங்களின் பங்களிப்பை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அன்புடன் பீற்றர்











கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?