முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b304

 பெண்கள் வெளிநாடுகளில் விளிப்பாக இருப்பது அவர்களை பாது கார்க்கும்



ரொரன்றோவில்… குப்பை கொட்ட போன இடத்தில்…. சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம்….


ரொரன்றோவில் Stockyards பகுதிக்கு அருகில் குப்பைத் தொட்டி ஒன்று உள்ளது. அந்த குப்பை தொட்டியில் கனேடிய மெக்கானிக் ஒருவர் கடந்த 25 ஆம் தேதி குப்பை கொட்ட சென்றுள்ளார்.

 அப்போது அந்த குப்பை தொட்டிக்கு அருகில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதை மெக்கானிக் பார்த்துள்ளார். பின்னர் அந்த சூட்கேசை மெக்கானிக் எடுத்து வந்து திறந்து பார்த்தபோது அதனுள் உயிரற்ற நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மெக்கானிக் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

 இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

அதன்பின் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சூட்கேசில் உயிரற்ற நிலையில் இருந்த அந்த பெண் 41 வயதுடைய Varsha Gajula என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

 மேலும் இவர் Caledonனை சேர்ந்த இந்தியப் பெண்மணி என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் போலீசார் நடந்தது கொலை என உறுதி செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில் “இந்தப் பெண்ணை யாராவது பார்த்திருந்தாலோ அல்லது கொலை குறித்து தகவல் தெரிந்தாலோ அல்லது கண்காணிப்பு கேமராவில் இந்த சம்பவம் குறித்த காட்சிகள் ஏதும் பதிவாகி இருந்தாலோ தங்களை தொடர்பு கொள்ளுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?