பிரிட்டன் பிளை-மவுத் கடல் கரையில் 6 பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி- தன்னையும் சுட்டு தற்கொலை !
பிரித்தானியாவின் பிரபல்யமான கடல்கரையான பிளை-மவுத்தில், முன்னர் அறிமுகம் இல்லாத 6 பேரை ஒரு துப்பாக்கிதாரி சுட்டுக் கொன்றுவிட்டு. மேலும் தன்னையும் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் பரபரப்பை தோற்று வித்துள்ளது.
நேற்று(12) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இணையம் அறிகிறது. இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று முதலில் பொலிசார் சந்தேகித்தாலும். இது அப்படி அல்ல என்று ஆரம்ப கட்ட விசாரணை ஊடாக தெரியவந்துள்ளது. துப்பாகிதாரியிடம் இந்த வகையான ஆயுதம் எப்படி வந்தது என்பது தொடர்பாக முதலில் பொலிசார் ஆராய ஆரம்பித்துள்ளார்கள். மேலும் …
இன் நபர் மன நிலை குன்றியவராக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
கருத்துகள்