இதைப் பார்த்து தமிழர்கள் உசார் அடைய வேண்டும் அலக்சியம் எமக்கு வேண்டாம்.
ஒரு கிழமையில் 5 தடவை நான் ஜிம் போவேன் என்னை கோவிட் தாக்காது என்ற 40 வயது நபர் இறந்த பரிதாபம் !
பிரித்தானியாவில் தற்போது கொரோனா தொற்று மீண்டும் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. மீண்டும் வைத்தியசாலை செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
. ஐTVல் ஒலிப்பதிவாளராக வேலைபார்த்த 40 வயது நபர், தடுப்பூசி எடுக்க கூடாது என்று பேசி வரும் இடது சாரி இயக்கத்தை பின்பற்றி வந்துள்ளார். ஒரு வாரத்தில் தான் 5 தடவை ஜிம் செல்வதாகவும். தனக்கு கொரோனா தொற்று ஏற்படாது என்றும் அவர் கூறி வந்தார். அப்படியே தொற்று ஏற்பட்டாலும் அது தானாக மாறிவிடும் என்று அவர் கூறி வந்த நிலையில்..
அவர் எந்த ஒரு தடுப்பூசியையும் எடுக்கவில்லை. இன் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது மனைவி கர்பிணியாக இருக்கிறார் என்பது மேலும் வருத்தம் தரும் செய்தியாக உள்ளது. இப்படி பிரித்தானியாவில் பலர் தடுப்பூசி தேவை இல்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.
கருத்துகள்