முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b228

 படையினரால் ஒருபோதும் கொரோனாவை ஒழிக்க முடியாது - எதிரணி எம்.பி குற்றச்சாட்டு




இலங்கையில் கொரோனா தொற்றானது கட்டுப்பாடுகள் இன்றி பரவல் அடைவதற்கு துறைசார்ந்த அறிவற்ற இராணுவத்தினரே காரணம் என ஐக்கிய மக்கள் சக்தி விமர்சித்துள்ளது.


கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலாதா அத்துகோரள, போர் செய்யப் பயிற்சி பெற்ற இராணுவப் படையினரால் ஒருபோதும் கொரோனா தொற்றை முற்றுமுழுதாக ஒழிக்க முடியாது என கூறியுள்ளார்.


இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தாம் அரசாங்கம் கூறுவதையே செய்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.


அரசாங்கம் என்றால் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ கூறுவதை செய்கின்றார்களா? அல்லது சுகாதார அமைச்சர் கூறுவதை செய்கின்றார்களா? கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பில் நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணரான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறுவதைக் கூட அரசாங்கம் செவிமடுப்பதில்லை என்று அவரே குறைகூறுகின்றார்.


ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் கூறிய விடயத்தை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் தற்போது நாடாளுமன்றத்தில் அவர் தெரிவிக்கும் இதே விடயத்தையே ஆரம்பத்திலேயே ஐக்கிய மக்கள் சக்தியும் கூறியது.


எவ்வாறு வைத்தியர்களுக்கு போர்க்களத்திற்கு சென்று யுத்தம் புரிய முடியாதோ, அதே போன்று யுத்தத்திற்கு பயிற்றுவிக்கப்பட்ட இராணுவத்தினரால் மருத்துவத்துறையுடன் தொடர்புடைய கொவிட் பரவலைக்கட்டுப்படுத்த முடியாது.


பொய் வாக்குறுதிகளைக் கூறி ஜனாதிபதி தேர்தலில் மக்களை ஏமாற்றியதைப் போன்றே, பொதுத் தேர்தலிலும் இந்த அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.   


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?