முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Ealam news b279

 


மங்களவின் மரணமும்... ராஜபக்ஷர்களின் அதிர்ஷ்டமும்!




இலங்கையின் எதிர்காலம் குறித்து கவலை கொண்டிருந்த, அரசியல் வாதியும், சிந்தனையாளருமான மங்கள சமரவீரவையும் corona கொரோனா காவுகொண்டது. ”குழந்தைகளே, உங்கள் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் வணங்குங்கள் என சிரேஸ்ர ஊடகவியலாளர் நடராஜா குருபரன் தனது முகநுால் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்....

ஆனால், அரசியல்வாதிகளை வணங்காதீர்கள். அவர்களை நீங்கள் வழிபட தேவையில்லை.” Children, Worship your parents and teachers. But, do not worship politicians. You do not need to worship them. கூறிய மங்கள சமரவீரவும் இல்லாதவர்களின் பட்டியலில் இணைந்துகொண்டார்.

மங்களசமரவீரவுடனான அனுபவப் பகிர்வுகளும், அவரது அரசியல் செயற்பாடுகளுமே இன்றைய ஊடகபரப்பை, சமூக வலைத்தளப் பதிவுகளை ஆக்கிரமித்துள்ளன.

2005 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 786 என்ற குறுகிய வாக்கு வித்தியாசத்தில் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, (Mahinda Rajapaksa) ஜனாதிபதியாக அரியாசனம் ஏறுவதற்கு காரணமாணவர்களில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் விபரீத விபத்தில் மரணித்த சிறீபதி சூரியாராட்சியும் முதன்மையானவர்கள்.



நான் நினைக்கிறேன் ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக 2005ன் நவம்பர் மாதத்தில் ஒருநாள், இலங்கை முழுவதுமாக இருந்த ஊடகவியலாளர்கள் அனைவரும் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டனர். அனைத்து பிராந்தியங்களில் இருந்தும் வந்திருந்த நூற்றுக்கணக்காண ஊடகவியலாளர்கள் அலரி மாளிகையை முற்றுகையிட்டனர்.

அந்த அழைப்பின் ஊடான முற்றுகையில் நானும் கலந்துகொண்டேன். அப்போ இருவர் நெற்றியில் வியர்வை சிந்த ரீசேட்டுகளுடன் மிகச் சாதாரண மனிதர்களாக பெரும் ”கிடாரங்களில்” உணவு வகைகளை கொண்டு வந்து இறக்கிக்கொண்டிருந்தனர். அலரிமாளிகையின் பணியாளர்களாக, வரவேற்பாளர்களாக, உணவு பரிமாறுபவர்களாக என பலவாகி, ஊடகவியலாளர்கள் அனைவரையும் ஆட்கொண்டவர்களாக மங்கள சமரவீரவும், சிறீபதி சூரியாராட்சி சுழன்று கொண்டிருந்தனர்.


 
இந்த நிகழ்வு பற்றி விமர்சித்த அன்றைய ஊடகங்கள் பல, அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களுக்கு “தன்சல” தானம் வழங்குகிறார்கள் என குறிப்பிட்டு இருந்தன. அந்த வகையில் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி வேட்பாளருக்கான பிரச்சார மேலாளர்களாக மங்கள சமரவீரவும், சிறீபதி சூரியாராட்சியும் பணியாற்றி இருந்தனர்.

2005 நவம்பரில் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றியடைந்ததை அடுத்து, அவரது அமைச்சரவையில் மங்கள சமரவீர வெளியுறவுத்துறை அமைச்சராகவும், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக சிறீபதி சூரியாராட்சியும் நியமிக்கப்பட்டனர்.

2007 ஜனவரியில் வெளியுறவுத்துறை அமைச்சுப் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட போதும், துறைமுக, வான் போக்குவரத்து அமைச்சராகத் தொடர்ந்து பதவியில் இருந்தார். 2007 பெப்ரவரி 9 இல், மஹிந்த ராஜபக்வுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, அமைச்சர்கள் அனுரா பண்டாரநாயக்கா, சிறீபதி சூரியாராச்சி ஆகியோருடன், மங்கள சமரவீரவும் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். இதனை அடுத்து சுந்தந்திரக் கட்சி (மகாசன) என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.


 
இதன்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவரது சகோதரர்களுக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர்களில் ஒருவரான சிறீபதி சூரியாராட்சி 2008ல் நடந்த விபரீத விபத்தில் பலியானார். குறிப்பாக 2005 ஜனாதிபதி தேர்தலில் தான் பிரச்சாரப் பிரிவுத் தலைவராத் தொழிற்பட்ட போது, மஹிந்த ராஜபக்ஷ இத்தேர்தல் வெற்றிக்காக, விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தார்.

அதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வடக்குக் கிழக்கில் தமிழர்கள் வாக்களிக்காமல் செய்தார் என இவர்கள் இருவரும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்கள். இனி சற்று பின்னோக்கிய வரலாற்றுக்கு செல்வோம் ஆயின், சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த மகாநாம சமரவீர, முன்னாள் மாத்தறை நகரசபை உறுப்பினர் கேமா பத்மாவதி அமரவீர ஆகியோரின் மகனான மங்கள சமரவீர 1983ஆம் அண்டு மாத்தறை மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக அரசியலில் நுழைந்தார்.

பின்னர் கட்சியின் துணைச் செயலாளர், ஒருங்கிணைப்புச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருந்தார். 1989களின் பின் ரணசிங்க பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்த போது, தற்போதைய பிரதமரும் அவரது நண்பருமான மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்துமனித உரிமை செயற்பாட்டாளராகவும் செயல்பட்டவர்.


 
1989 தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்ற அவர், 1994 இல் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமைச்சரவையில் அஞ்சல், தொலைத்தொடர்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதே அமைச்சரவையில், பின்னர் நகர அபிவிருத்தி அமைச்சராகவும், பின்னர் துணை நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

2001 இல் கட்சி SLFP தோல்வியடைந்ததை அடுத்து, சுதந்திரக் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். 2004 இல் சந்திரிக்காவின் அமைச்சரவையில் துறைமுக, வான் போக்குவரத்து, மற்றும் ஊடகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். எனினும் 2005 யூன் மாதம், ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, ஊடக அமைச்சுப் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது,

ஆனாலும் அவர் துறைமுக, வான் போக்குவரத்து அமைச்சராகத் தொடர்ந்து பதவியில் இருந்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுடன் முரண்பட்ட இவர் சந்திரிக்கா 2006வரை ஜனாதிபதியாக தொடரமுடியாது 2005டன் அவரது பதவிக் காலம் முடிவடைகிறது என வாதிட்ட மகிந்த தரப்பினரை ஆதரித்தவர்.


 
அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றின் ஆலோசனையை பெற்று 2005டன் சந்திரிக்காவை வீட்டுக்கு அனுப்பியவர்களில் மங்களவும் முதன்மையானவர். ஓர் அரசியல்வாதி என்ற முறையில் ஆரம்பத்தில் மங்கள சமரவீரவும் இலங்கையின் ஏனைய சராசரி அரசியல்வாதிகள் போன்றே ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகவே இருந்தார்.

பலம் வாய்ந்த ஓர் அமைச்சராக செயற்பட்ட காலத்தில் அவரால் நிகழ்த்தப்பட்ட அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அடாவடித்தனங்கள் பற்றியும், இரகசிய அரசியல் பேரங்களை நடாத்தி, மிரட்டி, ஆசை காட்டி, எதிரானவர்களை தமது வழிக்கு கொண்டு வருவதில் வல்லவர் எனவும் விமர்சனங்கள் உண்டு. ஊடகத் துறை அமைச்சராக இருந்த போது ஊடக நெறிமுறைகளை மீறினார்,

ஊடக நிறுவனங்களுக்கு அழுத்தங்களை பிரயோகித்தார் என்ற குற்றச்சாட்டுகளும் நிலவியிருந்தன. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெ்ற கொடூர யுத்தத்தின் போது ஊடக தணிக்கைகளை கடுமையாக பிரயோகித்தவர் என்பதோடு, அப்போதைய யுத்தத்திற்கு கூட்டு பொறுப்பேற்க வேண்டியவராகவும் இருந்தார்.

2010 இல் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். 2015 ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிக் கூட்டணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பேச்சாளராக இருந்து அவரின் வெற்றிக்குப் பெரும் உறுதுணையாக இருந்தார். 2015 ஜனவரி 12 இல், மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் மங்கள வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2019 ஜனாதிபதி தேர்தலை அடுத்து, மங்கள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிதாக உருவான ஐக்கிய மக்கள் சக்தியில் சேர்ந்தார். எனினும் 2020 நாடாளுமன்றத் தேர்தல் பட்டியலில் இடம்பெற்ற பின்பும், தான் போட்டியிடப் போவதில்லை எனவும், நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.

ஒரு லிபரல்வாதியான மங்கள தப்பான இடத்தில் நின்று அதனை சரியென நிறுவும் வல்லமை கொண்டவர். தான் ஒரு மாற்றுப் பாலின ஈர்ப்பாளர் என்ற விடயத்தை எவ்வித மனத் தடைகளும் இல்லாமல் பகிரங்கமாக கூறிக் கொள்ளும் துணிச்சல் மிக்கவர்.


 
2007ன் முன் மங்களவின் அரசியல் என்பது இனவாத தளத்தில் நின்று அதனை எதிர்க்காது, சராசரி அரசியல்வாதியாக தொடர்ந்தாலும், 2007ன் பின்னரான அரசியல் இனவாத தளத்தில் நின்று அதனை துணிவுடன் எதிர்க்கும் அரசியலாக மாற்றம் கண்டது.

அதன் தொடர்ச்சியே சஜித் பிரேமதாசவுடனான அரசியல் தொடர்சியை முடிவுக்கு கொண்டு வந்து, பிழைப்புவாத அரசியலுக்கு நேர் எதிர் திசையில் தன் பயணத்தை மங்கள தொடர்ந்தார்.

விசேடமாக இலங்கை அரசியல் சமூகத்தில், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எனக் கருதப்பட்டு வருபவர்களுக்கு – எதிராக தனது ஜதார்த்தமான கருத்துக்களை பதிவு செய்து வந்தார்.

அத்துரலியே ரத்ன தேரர் போன்ற இனவாத செயற்பாட்டாளர்கள், கார்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, அஸ்கிரிய, மல்வத்த பீடத்தினர் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்களுக்கு எதிராக, கருத்துகளை துணிவுடன் தெரிவித்து வந்தவர்.

மங்கள சமரவீரவின் குடும்பத்திற்கு வல்வெட்டித்துறையுடனும் தொடர்பு இருக்கிறது. பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த 'ஆழிக் குமரன்' ஆனந்தன் மங்களவுக்கு மாமா முறை அதாவது மங்களவின் அத்தையின் கணவர் என கூறப்படுகிறது.

தனது தந்தையின் சகோதரி மானெல் வல்வட்டித்துறை தமிழரான வழக்கறிஞர் குமார் ஆனந்தனை மணம் புரிந்தார். அவர் உலகப் புகழ் பெற்ற நீச்சல் வீரர்... அந்தப் புதிய தம்பதிக்கு முதலில் தங்கள் குடும்பத்தில் இரு கரம் நீட்டி வரவேற்பளித்தவர் தனது அம்மா எனவும், தன்னுடைய பல நற்பண்புகளை அவரிடமிருந்தே பெற்றுக்கொண்டதாக மங்கள குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கியாமானதொரு வகிபாகத்தைக் கொண்டிருந்த மங்கள சமரவீர சந்திரிக்கா - மகிந்த – மைத்திரி, ரணில் ஆட்சி காலங்களில் இலங்கையின் பிரதான கட்சிகளில், அரசியல் காய் நகர்த்தல்களில் முக்கிய பங்கு வகித்தவர்.

தனது இறுதிக்காலத்தில் அனைவரையும் அரவணைத்து ஐக்கிய இலங்கையை உருவாக்க வேண்டும் எனக் கனவு கண்டவர். இலங்கையின் இரண்டு பிரதான ஆட்சி மாற்றங்களின் சூத்திரதாரிகளில் ஒருவராக விளங்கிய மங்கள சமரவீர 2024ல் அல்லது அதற்கு முன்னதாக மீண்டும் ஒரு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தவர்.

அரசியல் காய் நகர்த்தல்களை மேகொண்டவர். ராஜபக்ஷர்களுக்கு எதிரான இன மத பேதமற்ற ஒரு பரந்துபட்ட தேசிய ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்கான உரையாடல்களில் ஈடுபட்டவர். இருந்த போதும் ராஜபக்ஷர்களின் அதிர்ஷ்டம் மங்களவின் துர் அதிஸ்டமாகிப் போனது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?