முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b312

 தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை ராஜபக்ஷ அரசு ஏற்குமா.


.


தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை அழைத்து வரும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுவதில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.


அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று பேசிய அவரிடம், தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சம் அடைந்தவர்களை மீண்டும் தாயகத்துக்கு அழைத்து வந்து மீள் குடியேற்றம் செய்யப்படுமா என கேட்கப்பட்டது. ஆனால், இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என அவர் பதிலளித்தார்.


இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை கடந்த காலங்களில் அழைத்து வந்தோம். ஆனால், தற்போது அப்படி அழைத்து வருவதில்லை. அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் தொடர்பிலான தமிழக முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்பதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ சமீபத்தில் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் 2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் நிறைவடைந்த பின்னர், தமிழகத்திற்கு தப்பிச் சென்று அகதிகளாக தஞ்சம் அடைந்தவர்களை அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அழைத்து வந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.


புள்ளி விவரங்களின்படி, ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன், 3,567 குடும்பங்கள், தமிழகத்திலிருந்து திருப்பி அழைத்து வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். நாடு திரும்பிய இலங்கை அகதிகளுக்கு தேவையான வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இலங்கைக்கு திரும்ப விரும்பும் அனைத்து, இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர்களின் வாழ்க்கையை மீள ஆரம்பிப்பதற்கான வசதிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மேற்கொள்வர் என்றும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.


நாமலுக்கு மனோ கணேசன் பதில் இந்த நிலையில், தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை வரவேற்பதற்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் 10 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் தமிழ் மக்களை மீள்குடியேற்றுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். நாமல் ராஜபக்ஷவின் ட்விட்டர் பதிவுக்கு பதில் பதிவாக இந்த கருத்தை மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.


யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு, பலாலி உள்ளிட்ட வளமான காணிகளிலிருந்து ராணுவத்தை அகற்றி, இந்த மக்களை தமது சொந்த நிலங்களுக்கு போக அனுமதிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?