முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b240

 பாலியில் தொழிலை ஊக்பப்படுத்தி அதன் ஊடாக கூடுதலான வருமானத்தை ஈட்டுவதற்கான திட்டம் மிக விரைவில்




‘பாலியல் தொழில் குற்றமல்ல’- விக்டோரியாவில் சட்டம் கொண்டுவரப்படுகிறது!


பாலியல் தொழிலில் ஈடுபடுவது ஒரு குற்றச்செயல் அல்ல என்பதாக விக்டோரியாவில் சட்டமாற்றம் விரைவில் நடைமுறைக்கு வரும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.


இதன்படி விக்டோரியாவின் ஏனைய தொழில்துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு இருக்கும் உரிமைகள் பாலியல் தொழிலாளர்களுக்கும் கிடைக்கவுள்ளது.


பாலியல் தொழிலாளர்களுக்கான சட்டங்களில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருதல், பாலியல் தொழில் குறித்த பார்வையை மாற்றுதல், பாலியல் தொழிலாளர்களுக்கான சுகாதார மற்றும் நீதித்துறை சேவைகளை மேம்படுத்தல் போன்ற பணிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும் என விக்டோரிய அரசு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


பாலியல் தொழில் தொடர்பில் தற்போது நடைமுறையில் இருக்கும் சட்ட வரையறைகளானது சுமார் 30 ஆண்டுகள் பழமையானவை எனவும், தற்போதைய சூழலுக்கு அவை பொருத்தமற்றவை எனவும் விக்டோரிய அரசு தெரிவித்துள்ளது.

தற்போதைய சட்டங்களின் படி விக்டோரியாவில்  street-based அடிப்படையிலான பாலியல் தொழில் ஒரு குற்றமாகும். ஆனால் பதிவு செய்யப்பட்ட பாலியல்விடுதிகள் மற்றும் escort agencies அல்லது தனியார் பாலியல் தொழிலாளியாக சேவைகளை வழங்குவது போன்றவை கடுமையான நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகளின்கீழ் அனுமதிக்கப்படுகிறது.


ஆனால் இது மிகவும் குழப்பகரமான மற்றும் கடுமையான நடைமுறை எனவும், ஏனைய பணியாளர்களைப்போலவே பாலியல் தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளும் பாதுகாப்பும் வழங்கப்படவேண்டுமெனவும், ஆஸ்திரேலிய பாலியல் தொழிலாளர் சங்கங்கள்  வலியுறுத்திவந்த பின்னணியில் அரசு இம்மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளது.


இந்நிலையில் பாலியல் தொழில் பாதுகாப்பானது என்பதை அரசு கொண்டுவரும் சட்டமாற்றம் உறுதிசெய்யும் என விக்டோரிய நுகர்வோர் விவகார அமைச்சர் Melissa Horne தெரிவித்தார்.


அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு விக்டோரியரும் தனது தொழிலில் பாதுகாப்பாக உணர்வதற்கான உரிமை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.


பாலியல் தொழில் குற்றமல்ல என்ற சட்டமாற்றத்தை நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு கடந்த 1995ம் ஆண்டு கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?