எதிரிகளின் வதந்திகளை தமிழீழ தமிழக மக்கள் நம்ப வேண்டாம் போராளி பீற்றர்
இந்தியா இலங்கை புலநாய்வாளர்கள் தங்களின் புகளிற்காக அல்லது அரசியில் நோக்கத்திற்காக விடுதலைப் புலிகள் தற்பொழுதும் இயங்கின்றார்கள் எனவும் அவர்கள் சட்டவிரோதமான கடத்தல் அல்லது அவர்களின் முகவர்கள் தான் இதை செய்கின்றார்கள் என அவர்கள் கூறுவதில் எவ்விதமான உன்மையும் இல்லையெனஎவ்விதமான உன்மையும் இல்லையென
கேரளாவில் விடுதலைப் புலிகள்; சென்னையில் இலங்கை தமிழர் வீட்டில் நுழைந்த அதிகாரிகள்!
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இலங்கை தமிழர் சபேசன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில், முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் கேரளா விழிஞ்சம் கடற்பகுதியில் 300 கிலோ ஹெராயின், ஏகே 47 துப்பாக்கி மற்றும் 1,000 தோட்டாக்களுடன் படகு பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தேசிய பாதுகாப்பு முகமை கடந்த மே மாதம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இந்த மாதம் மேலும் 2 பேரை கைது செய்தது.
அத்துடன் சம்பவம் தொடர்பில் , சென்னை, திருவள்ளூர், எர்ணாகுளம் உள்ளிட்ட 7 இடங்களில் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் இந்த சோதனை முடிவில் விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள் மொபைல் போன் சிம் கார்டுகள், உள்ளிட்ட 7 டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்