தலிபானில் பெண்களின் பாடு அரோகரா
ஆப்கானிஸ்தான் முக்கிய நகரங்களை கைப்பற்ற தலிபான்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இந்த விடயத்தில் தலையீடு செய்யுமாறு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் மோதல் விடயத்தில் வேறு எந்த நாட்டை விடவும் சிறப்பான பங்களிப்பை இலங்கையால் வகிக்க முடியும் என, இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் எம். அஷ்ரப் ஹைதாரி தெரிவித்துள்ளார்.
தலிபான்களை அழிப்பதற்கான செயற்பாட்டில் ஆப்கானிஸ்தானுக்கு உதவ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இலங்கை தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள முடியும் என்று ஆப்கானிஸ்தான் தூதுவர் எம். அஷ்ரப் ஹைதாரி கூறியுள்ளார்.
நீண்டகால மோதல் ஆப்கானிஸ்தானில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சர்வதேச சமூகத்திற்கு இலங்கை ஆலோசனை வழங்க முடியும் என்று
ஹைதாரி கூறியுள்ளார்.
கருத்துகள்