தொடரும் தமிழர்களின் தேசத்தைமீட்பதற்கான பணி செய் அல்லது செத்து மடி இது தான் தமிழர்களின் தாரக மந்திரம்
ஈழத் தமிழர்களின் துயரங்களுக்கு நிரந்தர தீர்வு கிட்டுமா? ஆதரவு திரட்டும் படலம் ஆரம்பம்
சமதா கட்சி மற்றும் ஈழத் தமிழர் நட்புறவு மையம் இணைந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்தனர்.
அவரிடம் இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் துயரங்களுக்கு நிரந்தர தீர்வு அமைய 3 கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அவை வருமாறு,
1) தமிழர்களின் தாயகமான தமிழீழம் அமைய வழி காண வேண்டும்.
2) ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை வன்முறைக்கு ஈடுசெய் நீதியைத் தேடுவது.
3) ஈழத் தமிழர்களின் தன்முடிவுரிமை கோரிக்கையை ஆதரிப்பது.
ஆகிய 3 கோரிக்கைகளையும் மத்திய அரசிடம் வலியுறுத்தவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
அனைத்தையும் கேட்டுக்கொண்ட பிரனாயி விஜயன் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
இதேவேளை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெறுவதாகவும், இதன் முதற்கட்டமாக கேரள முதலமைச்சரை சந்தித்ததாகவும் ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்