இலங்கை அரசு தொடர்பில் அமெரிக்காவின் திடீர் மாற்றம்
இலங்கையின் பொருளாதார செயல்திறனை, மேம்படுத்திக் கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலைய்னா பி.டெப்லிட்ஸ் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வியில் மேலும், உறுதியான பொருளாதார அடித்தளத்தை உருவாக்கும் மாற்றங்களில், இலங்கை ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுடனான தனது அண்மைய சந்திப்பு குறித்து கருத்துரைத்துள்ள அவர், முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சில சவால்கள், வரம்புகள் மற்றும் திறந்த, வெளிப்படையான சூழலின் தேவை பற்றியும், முதலீட்டாளர்களின் ஆபத்து தொடர்பாக தாம் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை உயர்தர முதலீட்டாளர்களை ஈர்க்க விரும்புவதை தாம் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கையின் பொருளாதாரம், தற்போது சிறந்த ஆரோக்கிய நிலையில் இல்லை.
இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம், வழங்கிய வளங்களைப் பயன்படுத்துவதே தீர்வுக்கு வழிவகுக்கும் என்று தாம் நம்புவதாகவும் அமெரிக்க தூதுவர் எலைய்னா பி.டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்