தாலிபான்களுக்கு அஞ்சி வெளிநாடுகளுக்கு தப்பும் ஆப்கான் அப்பாவி மக்கள்!
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைபற்றியுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
அங்கு தாலிபான்களின் ஆட்சி நடைபெறுவதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அதுமட்டுமின்றி தங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இருக்காது என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
சொந்த நாட்டில் இருந்து உயிர் பிழைத்தால் மட்டும் போதுமென்று அங்கிருந்து செல்ல காபூல் விமானநிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், வெளிநாடுகளில் வாழும் ஆப்கான் மக்கள் தங்கள் குடும்பங்களை காப்பாற்ற அங்கிருக்கு மற்ற நாட்டு தூதரங்களில் குவிந்து வருகின்றனர்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஆப்கான் மக்களுக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ள நிலையில் அந்த நாட்டு தூதரகங்களுக்கு மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.
கருத்துகள்