தலிபான்களிடம் சரணடைந்தது அமெரிக்கா-ட்ரம்ப் கடும் சீற்றம்
ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்பப் பெற்றது அமெரிக்க வெளியுறவுக்கொள்கைக்கு நேர்ந்த அவமானம் என முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அலபாமா மாநிலத்தில் கல்மேன் எனுமிடத்தில் பேசிய டிரம்ப், தலிபான்களிடம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்ததற்கு அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற ஜோ பைடன் எடுத்த முடிவே காரணம் எனக் குற்றஞ்சாட்டினார்.
ஜோ பைடன் நிர்வாகம் படைகளைத் திரும்பப் பெற்றது படைவிலக்கம் இல்லை என்றும், அது சரணடைந்ததற்குச் சமமாகும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
தான் பதவியில் இருந்திருந்தால் தலிபான்களால் இவ்வளவு விரைவில் நாட்டைக் கைப்பற்றியிருக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
கருத்துகள்