நாளை தாயகம் திரும்பும் இலங்கையர்கள் முருகன், பாயஸ், ஜெயக்குமார்!
![நாளை தாயகம் திரும்பும் இலங்கையர்கள் முருகன், பாயஸ், ஜெயக்குமார்! | Rajiv Gandhi Murder Sri Lankans Returning Country நாளை தாயகம் திரும்பும் இலங்கையர்கள் முருகன், பாயஸ், ஜெயக்குமார்! | Rajiv Gandhi Murder Sri Lankans Returning Country](https://cdn.ibcstack.com/article/a5039e08-27fd-43d3-8c3c-4294b4007c17/24-660c3c94a3a74.webp)
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் முருகன், ரொபட் பாயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தாயகம் அழைத்துவரப்பட்டவுள்ளனர்.
இந்நிலையில் நாளையதினம் (03-04-2024) காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து அழைத்துவரப்படும் அவர்கள் காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முருகன் சார்பில் வழக்காடிய சட்டத்தரணி ஒருவர் இலங்கை ஊடகம் ஒன்றிற்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த மூவரும் நாடு திரும்பு வகையில், கடந்த வாரம் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் கடவுச்சீட்டு வழங்கியிருந்தது.
இந்த நிலையில், குறித்த மூவரையும் இலங்கைக்கு அனுப்புவதற்கு மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் நாளை காலை நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட உள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 33 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நிலையில் உச்ச நீதிமன்றத்தால் 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
இதில் சாந்தன் நோய்வாய்ப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் சென்னை ராஜீவ்காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு யாழில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஏனைய மூவரையும் விரைவில் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்