முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 717

 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஓட்சிசன் தட்டுப்பாடு! மக்களிற்கு முக்கிய அறிவித்தல்

 


 மட்டக்ககளப்பில் கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஓட்சிசன் தேவை அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்பு


மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கோரிக்கை விடுத்துள்ளார் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியினால் இன்று வெள்ளிக்கிழமை (30) மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அண்மையிலே சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலே பொதுமக்கள் அதிகளவாக நகர்பகுதியில் நடமாடுவதாகவும் ஒரு சில இடங்களில் தனியார் வகுப்புக்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இன்றில் இருந்து தனியார்வகுப்புக்கள் தடை விதிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன் இதை மீறுவோருக்கு எதிராக சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிசாராலும் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.


அதேவேளை மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையிலே வழக்கமாக ஒரு நாளைக்கு 4 தொடக்கம் 5 சிலிண்டர் ஒட்சிசன் தேவைப்படுவது வழக்கம் ஆனால் தற்போது அதிகமாமைமை கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுவருவதன் காரணமாக ஒரு நாளைக்கு 15 சிலிண்டர் ஒட்சிசன் தேவைப்படுகின்றது.


எனவே இதுவரை காலமும் ஒட்சிசனைப் பற்றி சிந்திக்கவில்லை ஆகவே மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். அதேவேளை பொலிசார் இராணுவத்தினர் மற்றும் சுகாதார அதிகாரிகள் விதிக்கின்ற கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் மாத்திரமே கொரோனா தொற்றை தடுக்கமுடியும்.


அதேவேளை பொதுமக்களை வினையமாக கேட்டுக் கொள்வது மரணச்சடங்குகளில் 25 பேரும் திருமணவீடு அல்லது கோயில் 50 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாது எனவும் பொது இடங்களில் அனாவசியமாக கூடக்கூடாது எனவும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் உயிர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வீட்டை விட்டுவெளியேறி பொது இடங்களுக்கு செல்லவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.


குறித்த 3ஆம் கட்ட கொரோனா இளம் சந்ததியினரை தாக்குவது அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் இல்லாவிடில் வேறு மாவட்டங்களில் எதிர்நோக்கும் பிரச்சனையை எதிர்நோக்கவேண்டிவரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


மட்டு போதனா வைத்தியசாலையில் ஓட்சிசன் தேவை அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்ட மாவட்ட அரசாங்க அதிபர், போதுமான அளவு ஓட்சிசன் உள்ளதா என்பது தொடர்பில் எதனையும் வெளிப்படையாக தெரிவிக்காத காரணத்தால் ஓட்சிசன் தட்டுப்பாடு உள்ளது என அர்தம் உள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத மட்டு போதனா வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்த அவர் ஒட்டு மொத்தத்தில் கொரோனா நோயாளர்கள் அதிகரித்தால் அதனை ஈடுசெய்யும் நிலை தமது வைத்திய சாலையில் இல்லை என மேலும் தெரிவித்தார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?