முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 712

 யப்பா சாமி, அது நா இல்ல, சினிமா வாழ்க்கைக்கே வேட்டு வச்சிடுவீங்க போல.. புலம்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்



தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்(aishwarya rajesh) சமீபத்தில் கிளம்பிய வதந்தியால் தன்னுடைய கேரியர் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் போகிற பக்கமெல்லாம் அது நானில்லை நானில்லை என்று கூப்பாடு போட்டு கத்திக் கொண்டிருக்கிறாராம்.

 

தமிழில் காக்கா முட்டை படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று அதன் பிறகு தற்போது கவனிக்கப்படும் நாயகியாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.


அனுஷ்கா மற்றும் நயன்தாரா போல கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களிலும் முதல் சாய்ஸாக உள்ளார். நயன்தாரா கால்சீட் இல்லை என்றால் நேரடியாக அந்த கூட்டம் அப்படியே ஐஸ்வர்யா ராஜேஷ் பக்கம் வந்து விடுகிறது.


இப்படி கேரியர் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில்தான் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


ஆனால் அந்த படம் ஹிட்டானதில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மகிழ்ச்சி இல்லையாம். அதற்கு காரணம் நம்ம வீட்டு பிள்ளை படம் வெளியான பிறகு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தொடர்ந்து தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.


அதுவும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு வந்தால் யாருக்குத்தான் கோபம் வராது. அப்படித்தான் தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்ற கனவில் இருந்தவரை ஷாக்காக்கும் விதமாக தற்போது அல்லு அர்ஜுன் தங்கையாக புஷ்பா படத்தில் நடிக்கப் போகிறார் என செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.


இதைக் கேள்விப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் தான் போகுமிடமெல்லாம் புஷ்பா படத்தில் நான் நடிக்கவில்லை என மேடை போட்டு கூப்பாடு போடுகிறாராம்.





 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?