முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 649

 தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்று நாங்கள் சிந்தித்தாலும், முஸ்லீம் அரசியல்வாதிகள் சிலர் அவ்வாறு சிந்திப்பதாக 

 


தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்று நாங்கள் சிந்தித்தாலும், முஸ்லீம் அரசியல்வாதிகள் சிலர் அவ்வாறு சிந்திப்பதாக இல்லை. சில முஸ்லீம் அரசியல்வாதிகள் எமக்கு ஒரு முகமும் இந்த அரசுக்கு ஒரு முகமும் காட்டும் செயற்பாடுகளையே மேற்கொள்கின்றார்கள். இந்நிலை எதிர்காலத்தில் தமிழ் முஸ்லீம் சமூகங்கள் மத்தியில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த முடியாத நிலைமையே ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருக்கோவில் பிரதேசக் கிளை புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் நேற்று மாலை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


எமது தமிழ் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வந்திருக்கின்றார்கள். இந்த நாட்டிலே ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டுமாயின் எமது இந்த ஜனநாயக ரீதியான அரசியலைப் பலப்படுத்த வேண்டும்.


இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் இந்த நாட்டிலே தமிழர்கள் அடக்கப்பட்டதும், ஒடுக்கப்பட்டதும், பல இடம்பெயர்வுகள் இடம்பெற்றமையும் யாருமே மறுக்க முடியாதவை. இந்த நாட்டில் எமது இனமும் ஜனநாயக ரீதியாக வாழ வேண்டும். நீண்ட வரலாற்றினைக் கொண்ட எமது இனம் இந்த மண்ணிலே நிலையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் எமது இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டு செயற்படுகின்றது.


இந்த நாட்டின் ஜனநாயகம் பொருந்திய ஒரு கட்சியாக எமது கட்சி இருக்கின்றது. நாங்கள் எந்த விடயத்திலும் சோரம் போய் எமது சமூகத்தைச் சிரழிக்கும் விடயத்திற்கு ஒருபோதும் முன்நிற்கவில்லை. தற்போது மிகவும் மோசமானதொரு அடக்கு முறையை எமது தமிழ் சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. நாங்கள் இறைவழிபாட்டைக் கூட சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத ஒருநிலைமை இன்று இந்த நாட்டிலே நிலவுகின்றது. இந்து ஆலயம் அமைப்பதென்றால் பல இழுத்தடிப்புகளும், பௌத்த ஆலயம் அமைப்பதென்றால் உடனடி நடைமுறைகளுமே இங்கு இடம்பெறுகின்றது.


நாங்கள் வடக்கு கிழக்கு என்ற ரீதியில் மாத்திரமல்லாமல் இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் பேசும் மக்களுக்குமான ஒரு தீர்வை வேண்டி நிற்கின்ற போது எங்களோடு தமிழ் பேசும் உறவுகளாக இருக்கின்ற முஸ்லீம் அரசியல்வாதிகள் எமக்கு ஒரு முகமும் இந்த அரசுக்கு ஒரு முகமும் காட்டும் செயற்பாடுகளையே மேற்கொள்கின்றார்கள். கடந்த காலங்களிலும் எம்மோடு ஜனநாயக ரீதியான விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்று எம்மிடம் தெரிவித்து விட்டு அதற்கு மாறாக அரசுடன் இணைந்த சம்பவங்களே பல இடம்பெற்றுள்ளன.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் செயற்பட்டிருந்தாலும் கிழக்கில் இருக்கின்ற ஒரு சில முஸ்லீம் அரசியல்வாதிகள் தங்களுடைய சுய நலன்களுக்காக எமது சமூகத்தில் இருக்கின்ற சில அதிகாரங்களை இல்லாமல் செய்வதற்காக இப்போதும் முனைப்பான முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். குறிப்பாகக் கல்முனைத தமிழ் பிரதேச செயலகம் என்ற அதிகாரத்தினை இல்லாமல் செய்வதற்கான வேலைத்திட்டத்தினை ஒரு சில முஸ்லீம் அரசியல்வாதிகள் முன்னெடுப்பதென்பது மிகவும் ஒரு மன வேதனையான விடயம்.


முஸ்லீம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்பில் எமது கட்சி பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையில் கூட முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்களை எமது கட்சி முன்னெடுத்திருந்தது. இந்த நாட்டிலே ஜனநாயகம் நிலைக்க வேண்டும் என்பதற்காககத் தான் நாங்கள் இந்த அரசை எதிர்க்கின்றோம். அவர்களுடன் போராடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த நாட்டிலே இருக்கின்ற சில முஸ்லீம் அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமான விடயங்களைச் சாதிப்பதென்பது எதிர்காலத்தில் தமிழ் முஸ்லீம் சமூகங்கள் மத்தியில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த முடியாத நிலைமையே ஏற்படுத்தும். அதனையே அவர்கள் முன்னெடுக்கின்றார்கள். நாங்கள் மனவேதனைப் படுகின்றோம்;.


இவ்வாறான செயற்பாடுகளை அவர்கள் நிறுத்த வேண்டும். தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் நாங்கள் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்று நாங்கள் சிந்தித்தாலும், முஸ்லீம் அரசியல்வாதிகள் அவ்வாறு சிந்திப்பதாக இல்லை. எனவே எதிர்காலத்தில் நாங்கள் எமது செயற்பாடுகளை தூரநோக்குக் கொண்டு அமைக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் எனறு தெரிவித்தார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?