முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 677

 ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள ஈரானிய அகதி




ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில் சுமார் 5 ஆண்டுக்காலம் வைக்கப்பட்டிருந்த நிலையினால் இன்றும் மன நலச் சிக்கல்களுக்கு ஆளாகி வருவதாக ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள ஈரானிய அகதி Payam Saadat தெரிவித்திருக்கிறார். இதனால் சுரங்கப்பாதைத் தோண்டி தடுப்பிலிருந்து தப்பிக்க அவரும் பிற அகதிகளும் முயன்றிருந்தாக நீதிமன்றத்திடம் அவர் தெரிவித்திருக்கிறார்.


இவர்கள் சுரங்கப்பாதைத் தோண்டியது பின்னர் கண்டறியப்பட்ட போதிலும், அதற்கு முன்னதாக 4 வாரங்கள் வரை சுரங்கப் பாதைத் தோண்டியதை நீதிமன்றத்திடம் ஈரானிய அகதி குறிப்பிட்டிருக்கிறார்.


சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவை வந்தடைந்த ஈரானிய அகதியான Payam Saadat, ஆஸ்திரேலிய தடுப்பில் வைக்கப்பட்டிருந்த 5 ஆண்டுக்காலத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாகவும் அதன் தொடர்ச்சியாக மனநலச் சிக்கல்களை இன்றும் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்.


29 நாட்கள் படகு வழிப் பயணம் மூலம் ஆஸ்திரேலியாவை அடைந்த அவர், 2000 முதல் 2002 வரை மேற்கு ஆஸ்திரேலியாவின் Curtin குடிவரவுத் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கிறார். பின்னர் சுமார் 3 ஆண்டுக்காலம் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Baxter தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்திருக்கிறார்.


இவ்வாறான சூழலில், ஆஸ்திரேலிய அரசு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள தடுப்பு முகாம்களை நிர்வகித்த வந்த 2 தனியார் நிறுவனங்கள் மீது தற்போது ஈரானிய அகதியான Payam Saadat வழக்குத் தொடுத்திருக்கிறார். அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் மட்டத்தில் முக்கியமானதாக அணுகப்படும் இவ்வழக்கின் தீர்ப்பு, ஈரானிய அகதிக்கு ஆதரவாக வரும் பட்சத்தில் மேலும் பல அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர நேரிடும் எனக் கருதப்படுகின்றது.


ஈரானிய அகதி தொடர்ந்த வழக்கின் விசாரணை அடுத்த 12 வாரங்களுக்கு நடைபெறும் என எண்ணப்படுகின்றது.


“நாங்கள் மிகுந்த கவலையுடன் இருந்தோம். மோசமான உடல்நிலையுடன் இருந்தோம். எதாவது நல்லது நடக்கும் என்ற வாய்ப்பே இல்லாமல் இருந்தது. அதனால் சுரங்கப்பாதைத் தோண்டி தப்பிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம்,” எனத் தெரிவித்திருக்கிறார் Paayam Sadaat எனும் ஈரானிய அகதி.


இவ்வாறு சுரங்கப்பாதைத் தோண்டி தப்புவது கடுமையானது என்பதை அறிந்திருந்தாகக் கூறும் ஈரானிய அகதி, நாங்கள் எதிர்கொண்ட மோசமான நிலை மற்றும் வலிக் காரணமாகவே இவ்வாறு செய்தோம் எனக் கூறியிருக்கிறார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?