முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 637

 தமிழீழம் உருவாக்கப்பட்டிருந்தால் அனுமதித்திருப்போம் - பகிரங்கமாக கூறிய தேரர்


 


 

 

தமிழீழம் உருவாக்கப்பட்டிருக்குமானால் அதனை ஆறுதல் வார்த்தையிலாவது அனுமதித்திருந்திருப்போம் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் செயற்பட்டாளரான, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தின் ஊடாக தனிநாட்டை பெற்றிருந்தால், சர்வதேச அளவில் நாடு இன்று எதிர்கொண்டிருக்கும் சேதங்கள் கூட ஏற்பட்டிருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.


கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,


அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஹிட்லரைப் போல மாற வேண்டும். ஆனால் அவர் அவ்வகையில் இன்னும் மாறவில்லை என்று அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். அதுவே இன்றைய பிரச்சினை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.


ஆட்சிக்கு அவர் வரமுன்னரே அவர் ஹிட்லரைப் போல செயற்படுவார் என்றே சில பௌத்த பிக்குமார்களும் கூட தெரிவித்தனர். எனினும் ஹிட்லர் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருப்பது குறைவான விடயமே என்று கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதரகம் தெரிவித்திருக்கின்றது.


உண்மையில் ஹிட்லரைப் போல மாறினால் இறுதியில் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலையே செய்துகொள்ள நேரிடும். ஹிட்லர் இறுதியில் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டார். ஆகவே கோட்டாபயவும் சுட்டுத் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்றா இவர்கள் கூறுகின்றனர்? சில அமைச்சர்கள் இதனை இன்று அறியாமல் தெரிவிக்கின்றனர்.


இன்று கொழும்பு துறைமுக நகரத் திட்டம் ஒட்டுமொத்த நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு தாக்கம் செலுத்துகின்றது. தனிநாடாகவே அது உருவாகின்றது.


உண்மையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் போரின்போது தனிஈழ நாட்டை பெற்று வெற்றிபெற்றிருந்தால் நாட்டிற்கு இவ்வளவு சேதமொன்று ஏற்பட்டிருக்காது.


எங்களோடு எமது நாட்டோடு இருப்பவர்கள் என்று நினைத்து விடுதலைப் புலிகள் தனிநாடாக செயற்படுவதை சரியென்றும் ஆறுதல் கூறியிருந்திருக்கலாம்.


எனினும் இப்போது போர்ட் சிட்டியை முழுமையாக தனிநாடாக சுதந்தரித்துக்கொள்வதற்காக சீனா முயற்சிக்கின்றது. கோட்டாபயவுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களும் இன்று இதனை சிந்திக்க வேண்டும் என்றார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?