முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 657

 


DUDE, கொரோனான்னு ஒண்ணு கிடையாது’… ‘அப்படி சொல்றவங்களுக்கு’… ‘ஒரு டாக்டரா இத சொல்ல கூடாது, ஆனா சொல்றேன்’… நெஞ்சை நொறுக்கும் கண்ணீர் 

கொரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மருத்துவர் ஒருவர் வெளியிட்டுள்ள கண்ணீர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Doctor Trupti Gilada Breaks Down as She Urges People to Mask Up

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் கோரத் தாண்டவமாடி வருகிறது என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா வைரஸ் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலம் மராட்டியம் தான். தினசரி பாதிப்பு 55 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது. தற்போது 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.


Doctor Trupti Gilada Breaks Down as She Urges People to Mask Up


இதில் பெரும் சோகம் என்னவென்றால் தலைநகர் மும்பையில் கொரோனா நோயாளிகளுக்குப் படுக்கைகள் கிடைப்பது பெரும் திண்டாட்டமாக உள்ளது. இங்குள்ள மருத்துவமனைகளில் தொற்று பாதித்த நோயாளிகளுக்கான படுக்கைகள் 80 சதவீதம் நிரம்பி விட்டன. தீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் வெண்டிலேட்டர் வசதியுள்ள படுக்கைகளில் 98 சதவீதம் நிரம்பி விட்டன.


மேலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் பற்றாக்குறையும் நிலவுகிறது. சில நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 2 தனியார் மருத்துவமனைகளில் 10 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் மும்பையில் தற்போது ஒருவித அசாதாரணமான சூழ்நிலை நிலவி வரும் வேளையில் தொற்றுநோய் நிபுணரான டாக்டர் தி்ருப்தி கிலாடா கண்ணீர் ததும்பப் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ”ஒரு மருத்துவராக இதைச் சொல்வதற்குக் கஷ்டமாக உள்ளது.


Doctor Trupti Gilada Breaks Down as She Urges People to Mask Up


ஆனால் நாங்கள் உதவியற்றவர்களாக இருக்கிறோம். இதுபோன்ற ஒரு சூழ்நிலையை இதற்கு முன்பு பார்த்தது இல்லை. மக்கள் பீதியடைந்துள்ளனர். நாங்கள் அதிகமான நோயாளிகளைக் கவனிக்க வேண்டியுள்ளது. படுக்கைகள் இல்லாததால் மோசமான நிலையிலிருக்கும் நோயாளிகள் வீட்டில் சிகிச்சை பெறுகிறார்கள். முதலில் நீங்கள் அனைவரும் தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்.


உங்களுக்கு கொரோனா வரவில்லை என்றாலோ அல்லது கொரோனாவிலிருந்து மீண்டு வந்திருந்தாலோ நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோ என்று நினைக்க வேண்டாம் அல்லது உங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பதாக நினைக்க வேண்டாம். நீங்கள் தவறு செய்கிறீர்கள். பல இளைஞர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்கள். அவர்களுக்கு நாங்கள் உதவ முடியாது.


Doctor Trupti Gilada Breaks Down as She Urges People to Mask Up


கொரோனா எல்லா இடங்களிலும் உள்ளது. அதனால் முககவசம் அணியாமல் வெளியே செல்லாதீர்கள். தகுதியுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி கடுமையான பாதிப்பைத் தடுக்க உதவும்” என அந்த வீடியோவில் உருக்கமாகப் பேசியுள்ளார். கொரோனா தீவிரமாகப் பரவி வரும் இந்த நேரத்திலும் சிலர் மாஸ்க் அணியாமலும், கொரோனா என்று ஒரு வியாதியே கிடையாது என விதண்டாவாதம் பேசிக் கொண்டு இருப்பதை இன்னும் காண முடிகிறது.


அவ்வாறு பேசிக் கொண்டு இருப்பவர்கள் இதுபோன்று மருத்துவர்கள் படும் கஷ்டத்தைச் சிறிதேனும் நினைத்துப் பார்க்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?