முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 692

 யாழில் புதுமனைப் புகுவிழாவில் உறவினர்களுக்கு இடையில் வாள்வெட்டு! மூவருக்கு நேர்ந்த நிலை


 

 


  

யாழ்ப்பாணம் தென்மராட்சியின் கெற்பெலி கிராமத்தில் நடைபெற்ற புதுமனைப் புகுவிழாவில் வழங்கப்பட்ட அன்பளிப்புப் பணத்தால் உறவினர்களுக்கு இடையில் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்று மூவர் காயம் அடைந்துள்ளனர்.


இது குறித்து மேலும் தெரியவருவதாவது,


கெற்பெலி கிராமத்தில் நேற்று முன்தினம் புதிதாக கட்டப்பட்ட வீடு ஒன்றின் புதுமனைப் புகுவிழா நடைபெற்றிருக்கின்றது.


மறு நாள் வீட்டின் உரிமையாளர் அந்தக் கிராமத்தின் விற்பனை நிலையம் ஒன்றுக்குச் சென்றிருக்கின்றார். அங்கு அவர் வழங்கிய பணம் கள்ளப் பணம் என்று விற்பனை நிலைய உரிமையாளர் தெரிவித்திருக்கின்றார்.


இந்நிலையில் குறித்த பணத்தினை முதல் நாள் நடைபெற்ற புதுமனை புகுவிழாவிற்கு வந்திருந்த தன்னுடைய சகோதரியின் மகனே குறித்த பணத்தினை தனக்கு வழங்கியதாக புது வீட்டின் உரிமையாளர் தெரிவித்திருக்கின்றார்.


இதனை அடுத்து இரண்டு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருக்கின்றது.


இந்நிலையில் கடந்த இரவு புதுமனைப் புகுவிழா நடைபெற்ற வீட்டிற்குச் சென்ற பணம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட தரப்பினர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் சென்றுள்ளனர்.


இந்நிலையில் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டிற்குச் சென்ற புதுமனைப் புகுவிழா நடத்திய வீட்டினைச் சேர்ந்த தரப்பினர் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.


இதன் போது மூவர் காயம் அடைந்திருக்கின்றனர். காயமடைந்த மூவரும் இன்று காலை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வெட்டுக் காயங்களுடன் சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.   


குறித்த சம்பவத்தின் தொடராக இன்று மாலையும் தாக்குதலுக்கு உள்ளான தரப்பு மீண்டும் தாக்குதலுக்கு முயன்றிருக்கின்றது.


சம்பவத்தினை அடுத்து இரண்டு தரப்பினரும் கொடிகாமம் பொலிஸ் நிலையம் சென்றிருக்கின்றனர் என்று அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் இதுவரையில் திருட்டுப் பணம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.   


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?